ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 5. யாக்கை நிலையாமை

பதிகங்கள்

Photo

ஆர்த்தெழு சுற்றமும் பெண்டிரும் மக்களும்
ஊர்த்துறைக் காலே ஒழிவர் ஒழிந்தபின்
வேர்த்தலை போக்கி விறகிட் டெரிமூட்டி
நீர்த்தலை மூழ்குவர் நீதியி லோரே. 

English Meaning:
They Too Finally Depart Cleansing Themselves by a Bath
Mourning friends, weeping spouse, dear children all,
They but followed him to the river`s edge—not a step beyond;
Then sorrow dropped its mark, quick the pyre was lit,
Then they plunge in water, heart-whole they, the graceless band.
Tamil Meaning:
கல்லென்று ஆரவாரித்து எழுகின்ற சுற்றத் தாரும், மனைவியரும், மக்களும் ஆகிய எல்லாரும் ஊர் எல்லையைக் கடந்து அப்பால் வரமாட்டாது அவ்வெல்லைக்குள்ளே நின்றொழி வார்கள். அதன்பின் பிறர், மரங்களை, வேரும் முனையும் போகத் தறித்துக் கொணர்ந்த விறகின் மேல் வைத்து நெருப்பை நன்றாக மூட்டி எரியப் பார்த்துவிட்டு, நீரிலே சென்று தலை முழுகுவார்கள்.
Special Remark:
`காலத்தாலும், இடத்தாலும் கட்டுண்டு கிடக்கும் அவர்களைப் பற்றுவதால் பயனில்லை` என்பதாம். ``கால்`` என்றது எல்லை. அயன்மையை `நீதியின்மை` என்றார்.