ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Paadal

  • 1. மாமாயை மாயை வயிந்தவம் வைகரி
    ஓமாயை நாரணி ஓராறு கோடியில்
    தாமான மந்திரம் சத்திதன் மூர்த்திகள்
    ஆமாய் அலவாம் திரிபுரை ஆங்கே.
  • 10. அறிவார் பராசத்தி ஆனந்தம் என்பர்
    அறிவார் அருவுரு வாம்அவள் என்பர்
    அறிவார் கருமம் அவள்இச்சை என்பர்
    அறிவார் பரனும் அவளிடத் தானே.
  • 11. தான்எங் குளன்அங் குளள்தையல் மாதேவி
    ஊன்எங் குளஅங் குளஉயிர் காவலன்
    வான்எங் குளதங் குளேவந்தும் அப்பாலாம்
    கோன்எங்கும் நின்ற குறிபல பாரே.
  • 12. பராசத்தி மாசத்தி பல்வகை யாலும்
    தராசத்தி யாய்நின்ற தன்மை உணராய்
    உராசத்தி ஊழிகள் தோறும் உடனாம்
    புராசத்தி புண்ணிய மாகிய போகமே.
  • 13. போகம்செய் சத்தி புரிகுழ லாளொடும்
    பாகம்செய் தாங்கே பராசத்தி யாய்நிற்கும்
    ஆகம்செய் தாங்கே அடியவர் நாள்தொறும்
    பாகம்செய் ஞானம் படர்கின்ற கொம்பே.
  • 14. கொம்பனை யாளைக் குவிமுலை மங்கையை
    வம்பவிழ் கோதையை வானவர் நாடியைச்
    செம்பவ ளத்திரு மேனிச் சிறுமியை
    நம்பிஎன் னுள்ளே நயந்துவைத் தேனே.
  • 15. வைத்த பொருளும் மருவுயிர்ப் பன்மையும்
    பத்து முகமும் பரையும் பாரபரச்
    சித்தக் கரணச் செயல்களும் செய்திடும்
    சத்தியும் வித்தைத் தலைவிய ளாம.
  • 16. தலைவி தடமுலை மேல்நின்ற தையல்
    தொலைவில் தவம்செய்யும் தூய்நெறித் தோகை
    கலைபல ஏன்றிடும் கன்னி என் உள்ளம்
    நிலைபெற இங்கே நிறைந்துநின் றாளே.
  • 17. நின்றவள் நேரிழை நீள்கலை யோடுற
    என்றன் அகம்படிந் தேழுல கும்தொழ
    மன்றது ஒன்றி மனோன்மனி மங்கலி
    ஒன்றொனொ டொன்றிநின் றொத்தடைந் தாள.
  • 18. ஒத்தடங் குங்கம லத்திடை ஆயிழை
    அத்தகை செய்கின்ற ஆய பெரும்பதி
    மத்தடை கின்ற மனோன்மனி மங்கலி
    சித்தடைக் கும்வழி தேர்ந்துண ரார்களே.
  • 19. உணர்ந்துட னேநிற்கும் உள்ளொளி யாகி
    மணங்கமழ் பூங்குழல் மங்கையுந் தானும்
    புணர்ந்துட னேநிற்கும் போதருங் காலைக்
    கணிந்தெழு வார்க்குக் கதிஅளிப் பாளே.
  • 2. திரிபுரை சுந்தரி அந்தரி சிந் தூரப்
    பரிபுரை நாரணி ஆம்பல வன்னத்தி
    இருள்புரை ஈசி மனோன்மனி என்ன
    வருபல வாய்நிற்கும் மாமாது தானே.
  • 20. அளியொத்த பெண்பிள்ளை ஆனந்த சுந்தரி
    புளியுறு புன்பழம் போல்உள்ளே நோக்கித்
    தெளியுறு வித்துச் சிவகதி காட்டி
    ஒளியுற வைத்தென்னை உய்யஉண் டாளே.
  • 21. உண்டில்லை என்ன உருச்செய்து நின்றது
    வண்டில்லை மன்றினுள் மன்னி நிறைந்தது
    கண்டிலர் காரண காரணி தன்னொடும்
    மண்டிலம் மூன்றுற மன்னிநின் றாளே.
  • 22. நின்றாள் அவன்றன் உடலும் உயிருமாய்ச்
    சென்றாள் சிவகதி சேரும் பராசத்தி
    ஒன்றாக என்னுட் புகுந்துணர் வாகியே
    என்றாள் பரஞ்சுடர் ஏடங்கை யாளே.
  • 23. ஏடங்கை நங்கை இறைஎங்கள் முக்கண்ணி
    வேடம் படிகம் விரும்பும்வெண் டாமரை
    பாடும் திருமுறை பார்ப்பதி பாதங்கள்
    சூடுமின் சென்னி வாய்த்தோத்திரங்கள் சொல்லுமே.
  • 24. தோத்திரம் செய்து தொழுது துணையடி
    வாய்த்திட ஏத்தி வழிபடு மாறிரும்
    பார்த்திடும் அங்குச பாசம் பசுங்கரும்
    பார்த்திடும் பூப்பின்னை ஆகுமாம் ஆதிக்கே.
  • 25. ஆதி விதம்மிகுத் தண்டந்த மால்தங்கை
    நீதி மலரின்மேல் நேரிழை நாமத்தைப்
    பாதியில் வைத்துப் பலகாற் பயில்விரேல்
    சோதி மிகுத்துமுக் காலமும் தோன்றுமே.
  • 26. மேதாதி ஈரெட்டு மாகிய மெல்லியல்
    வேதாதி நூலின் விளங்கும் பராபரை
    ஆதார மாகியே ஆய்ந்த பரப்பினள்
    நாதாதி நாதத்து நல்லரு ளாளே.
  • 27. அருள்பெற் றவர்சொல்ல வாரீர் மனிதர்
    பொருள்பெற்ற சிந்தைப் புவனா பதியார்
    மருளுற்ற சிந்தையை மாற்றி அருமைப்
    பொருளுற்ற சேவடி போற்றுவன் யானே.
  • 28. ஆன வராக முகத்தி பதத்தினில்
    ஈனவ ராகம் இடிக்கும் முசலத்தோ
    டேனை எழுபடை ஏந்திய வெண்ணகை
    ஊனம் அறஉணர்ந் தார்உளத் தோங்குமே.
  • 29. ஓங்காரி என்பாள் அவள்ஒரு பெண்பிள்ளை
    நீங்காத பச்சை நிறத்தை உடையவள்
    ஆங்காரி யாகியே ஐவரைப் பெற்றிட்டு
    இரீங்காரத் துள்ளே இனிதிருந் தாளே.
  • 3. தானே அமைந்தஅம் முப்புரந் தன்னிடைத்
    தானான மூவுரு ஓருருத் தன்மையள்
    தானான பொன்செம்மை வெண்ணிறத் தாள் கல்வி
    தானான போகமும் முத்தியும் நல்குமே.
  • 30. தானே தலைவி எனநின்ற தற்பரை
    தானே உயர்வித்துத் தந்த பதினாலும்
    மானோர் தலமும் மனமும்நற் புத்தியும்
    தானே சிவகதித் தன்மையு மாமே.
  • 4. நல்குந் திரிபரை நாத நாதாந்தங்கள்
    பல்கும் பரவிந்து பார்அண்ட மானவை
    நல்கும் பரை அபிராமி அகோசரி
    புல்கும் அருளும் அப் போதம்தந் தாளுமே.
  • 5. தாளணி நூபுரம் செம்பட்டுத் தான் உடை
    வாரணி கொங்கை மலர்க்கன்னல் வாளிவில்
    ஏரணி அங்குச பாசம் எழில்முடி
    காரணி மாமணிக் குண்டலக் காதிக்கே.
  • 6. குண்டலக் காதி கொலைவிற் புருவத்தள்
    கொண்ட அரத்த நிறம்மன்னு கோலத்தள்
    கண்டிகை ஆரம் கதிர்முடி மாமதிச்
    சண்டிகை நாற்றிசை தாங்கிநின் றாளே.
  • 7. நின்ற திரிபுரை நீளும் புராதனி
    குன்றலில் மோகினி மாதிருக் கும்சிகை
    நன்றறி கண்டிகை நாற்கால் கரீடிணி
    துன்றிய நற்சுத்த தாமரைச் சுத்தையே.
  • 8. சுத்தஅம் பாரத் தனத்தி சுகோதையள்
    வத்துவ மாய்ஆளும் மாசத்தி மாபரை
    அத்தகை யாயும் அணோரணி தானுமாய்
    வைத்தஅக் கோலம் மதியவ ளாகுமே.
  • 9. அவளை அறியா அமரரும் இல்லை
    அவளன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
    அவளன்றி ஐவரால் ஆவதொன் றில்லை
    அவளன்றி ஊர்புகும் ஆறறி யேனே.