ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 5. சத்திபேதம்

பதிகங்கள்

Photo

நின்ற திரிபுரை நீளும் புராதனி
குன்றலில் மோகினி மாதிருக் கும்சிகை
நன்றறி கண்டிகை நாற்கால் கரீடிணி
துன்றிய நற்சுத்த தாமரைச் சுத்தையே.

English Meaning:
Tiripurai is Seated on Lotus

Tiripurai who thus stood is Puratani,
She is Mohini whose beauty wanes not
On the crown of her tresses is Damsel Ganga,
Her eyes perceive Jnana true,
Karidani who attracts in directions four,
She is the Immaculate, seated on circle of lotus pure.
Tamil Meaning:
நித்தியளாகிய திரிபுரை கால எல்லையைக் கடந்த பழமை உடையவள். மாயை வழியாக உயிர்களை மயக்குபவள்; அழகிய கூந்தலை உடையவள் ; நன்கு விளங்குகின்ற உருத்திராக்க மாலையை அணிந்திருப்பவள்; நான்கு கால்களை உடைய யானையை ஊர்பவள். வெண்டாமரைமேல் வீற்றிருக்கும் வெள்ளைத் திருமேனியை உடையவள்.
Special Remark:
தாமரை, திருமேனி என்பவற்றது நிறத்தோடு ஒப்ப யானையின் நிறத்தையும் வெண்மையென உணர்க. வெண்மை, ஞானத்தின் அடையாளம். `பின்னர் ஞானத்தை வழங்கும் இவளே முன்னர் மயக்கத்தைச் செய்பவள்` என்பார், ``குன்றலில் மோகினி`` என முன்னே கூறினார். மாது - அழகு. கூந்தலை, `சிகை` என்றது வழு வமைதி. சுத்தமாவது வெண்மை. `சுத்தை` என்பது பெண்பாற் பெயர்.
இதனால், திரிபுரையது முதல் தியான உருவம் கூறப்பட்டது.