ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 5. சத்திபேதம்

பதிகங்கள்

Photo

குண்டலக் காதி கொலைவிற் புருவத்தள்
கொண்ட அரத்த நிறம்மன்னு கோலத்தள்
கண்டிகை ஆரம் கதிர்முடி மாமதிச்
சண்டிகை நாற்றிசை தாங்கிநின் றாளே.

English Meaning:
Tiripurai`s Form

On Her Feet she wears anklets,
She adorns red silk dress,
Her breasts are in corsets contained,
She sports arrows of flowers,
And bow of sugarcane,
And mighty goad-noose strings;
On Her lovely head She wears the diadem
On Her ears She wears Kundalas
Of bluish radiant gems.
Tamil Meaning:
குண்டலம் அணிந்த காதினை உடையவள்; கொலை செய்கின்ற வில்லை ஒத்த புருவத்தை உடையவள்; சிவந்த மேனியை உடையவள்; உருத்திராக்க மாலையைப் பூண்டவள்; ஒளிவீசுகின்ற கிரீடத்திலே பிறை அணிந்தவள்; `சண்டிகை` என்னும் பெயர் உடையவள்; இவள் உலகங்களைத் தீமையினின்றும் நீக்கிக் காத்தருள்கின்றாள்.
Special Remark:
தீயவர்களை அழித்து, நல்லவர்களைக் காப்பாற்று கின்றாள்` என்றபடி. இவளுக்குச் சிவந்த நிறம் - நெருப்புப் போன்ற காட்சி கூறினமை அறியத் தக்கது. `முடியில் மதியை உடைய சண்டிகை` என்க.
இதனால், திரிபுரையது மற்றொருவகைத் தியான உருவம் கூறப்பட்டது.