ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 5. சத்திபேதம்

பதிகங்கள்

Photo

நல்குந் திரிபரை நாத நாதாந்தங்கள்
பல்கும் பரவிந்து பார்அண்ட மானவை
நல்கும் பரை அபிராமி அகோசரி
புல்கும் அருளும் அப் போதம்தந் தாளுமே.

English Meaning:
Tiripurai Grants Grace and Jnana

Tiripurai confers Nada, Nadanta states
She as Para Bindu expands,
And to the cosmic Universe gives rise,
She is Parai, Abhirami, Agochari
She grants Her love of Grace,
And Jnana as well.
Tamil Meaning:
ஐந்தொழில் முதல்வரைத் தருகின்ற திரிபுரை நாதம், நாதாந்தம், பலவாய் விரியும் பரவிந்து, நிலம், வானம் முதலிய அளவற்ற பொருள்களை ஆக்குவாள். அதனால், அவள் அனை வர்க்கும் மேலானவள்; பலரையும் இன்புறச் செய்பவள்; மன வாக்குகளுக்கு அகப் படாதவள். பக்குவம் வந்த நிலையில் அருட் சத்தியாயும் பதிவாள். பின்பு ஞானத்தைக் கொடுத்துத் தன் திருவடிக்கு ஆளாக்கிக் கொள்வாள்.
Special Remark:
நல்குதல் இரண்டில் முன்னது அருளல்; பின்னது படைத்தல். நாதம் முதலியன, காரியப் பொருள்கள் பலவற்றுள் சிலவற்றை விதந்தவாறு. பரை முதலிய மூன்றும் காரணப்பெயர்களாய் நின்றன. புல்குதல் - பதிதல். ``அருளும்`` என்னும் உம்மை சிறப்பு. `மெய்யுணர்வு` என்றற்கு. `அப்போதம்` எனச் சிறப்பித்துக் கூறினார். `போதமும்` என்னும் எண்ணும்மை தொகுத்தலாயிற்று.
இதனால், சத்தி போக மோட்சங்களைத் தருமாறு வகுத்துக் கூறப்பட்டது.