
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 5. சத்திபேதம்
பதிகங்கள்

ஒத்தடங் குங்கம லத்திடை ஆயிழை
அத்தகை செய்கின்ற ஆய பெரும்பதி
மத்தடை கின்ற மனோன்மனி மங்கலி
சித்தடைக் கும்வழி தேர்ந்துண ரார்களே.
English Meaning:
She is Way to JnanaIn the Lotus of heart within
She merged,
She the bejewelled One,
She merged in rapture in Her Lord
Manonmani, the Jewel of Inmost Thought,
Mangali, the auspicious Ever,
She is the path to gather Jnana,
Her, they know not.
Tamil Meaning:
அன்பர்களிடத்தில் ஒன்றியிருக்க இசைந்து, அவர்களது உள்ளத் தாமரையிலே அடங்கி நிற்கின்றவளும், அத் தன்மையை உடைய உயர்ந்த பெரிய தலைவனாகிய சிவனிடத்தில் நிறைந்து நிற்பவளும், மனோன்மனியும், நித்திய சுமங்கலியும் ஆகிய திரிபுரை பல வகைச் சித்துக்களையும் உயிர்களிடத்தில் புரிந்து நிற்கின்ற முறையை உலகர் ஆராய்ந்து அறிகின்றார் களில்லை.Special Remark:
`கமலத்திடை அடங்கும் ஆயிழை` என மாற்றிக் கொள்க. `பதியோடு` என உருபு விரிக்க. `மத்து` என்பது, நிறைவை உணர்த்தும் வடசொல். ``சித்து`` என்றது `அதிசயச் செயல்கள்` என்றபடி. ``வழி`` என்றது தான் சிவத்தொடு நின்றே எதனையும் செய்பவளாதலை. இதனால், திரிபுரை எதனையும் சிவத்தொடு நின்றே செய்தல் கூறப்பட்டது.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage