
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 5. சத்திபேதம்
பதிகங்கள்

ஆன வராக முகத்தி பதத்தினில்
ஈனவ ராகம் இடிக்கும் முசலத்தோ
டேனை எழுபடை ஏந்திய வெண்ணகை
ஊனம் அறஉணர்ந் தார்உளத் தோங்குமே.
English Meaning:
Grace TransformsO! Ye who were blessed by Her Grace
Tell these men,
How this Mother that rules worlds all
Of Divine Jnana filled
Transformed your inconstant thoughts,
And made you realize god-truth;
Her Holy Feet, I adore ever.
Tamil Meaning:
திரிபுரை, ஒறுப்பிற்கு ஏற்ற வராக முகத்தை உடை யவள்; இழிகுணம் படைத்த தீயோரது உடலங்களைக் காலத்தில் அழிப்பாள்; உலக்கையோடு மற்றும் ஏழு ஆயுதங்களை ஏந்தி இருப்பாள்; சிரித்த முகத்தையுடையவள். தங்கள் துன்பங்களை நீக்க வேண்டித் தியானிப்பவர்களது உள்ளத்தில் அவள் இவ்வாறு விளங்குவாள்.Special Remark:
`இறைவன் போகி, யோகி, வேகி - என்னும் மூன்று நிலையில் நிற்குங்கால் சத்தியும் அவற்றிற்கு ஏற்பவே நிற்பாள்` என்பது,``எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பாள்`` 1
என்பதனால் அறியப்படும். அற்றுள் சத்தியது வேகவடிவத்தில் `வராகி` - என்பவள் மிகக் கடுமையானவளாகக் குறிக்கப்படுதலால் அவளது நிலையை இங்குச் சிறப்பாக எடுத்துக் கூறினார். இதனானே, ஏனை வேகவடிவங்களும் கொள்ளப்படும்.
இதனால், சத்தியது மறக்கருணை நிலையாகிய வேகவடி வத்தின் இயல்பு கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage