ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 5. சத்திபேதம்

பதிகங்கள்

Photo

சுத்தஅம் பாரத் தனத்தி சுகோதையள்
வத்துவ மாய்ஆளும் மாசத்தி மாபரை
அத்தகை யாயும் அணோரணி தானுமாய்
வைத்தஅக் கோலம் மதியவ ளாகுமே.

English Meaning:
Tiripurai is Seated on Lotus

Tiripurai who thus stood is Puratani,
She is Mohini whose beauty wanes not
On the crown of her tresses is Damsel Ganga,
Her eyes perceive Jnana true,
Karidani who attracts in directions four,
She is the Immaculate, seated on circle of lotus pure.
Tamil Meaning:
திரிபுரை இன்னும் தூய, அழகிய, திண்ணிய கொங்கைகளை உடையவள்; பேரின்பத் தோற்றத்திலே விளங்கு பவள்; மெய்ப்பொருள்களை உணரும் ஞானமாய் நின்று உயிர்களை ஆட்கொள்கின்ற பேராற்றலை உடையவள். எல்லாச் சத்திகளினும் பெரியளாய் மேலான சத்தி; அப்பொழுதே அணுவினுள் அணுவாய் நிற்கும் நுண்ணியளுமாய் எண்ணப்பட்டு அழகிய நிறைமதி போலும் ஒளியினை உடையவளுமாவாள்.
Special Remark:
ஞானம் நிறைந்து நிற்றலைக் குறிக்க, ``சுத்த, அம், பாரத்தனம்`` என்றார். வத்து - பொருள்; மெய்ப்பொருள். அதன் தன்மை, ``வத்துவம்`` எனப்பட்டது. வத்துவம் உடையதனை, ``வத்துவம்`` என்றார். `வாஸ்துவம்` என்னும் வழக்குண்மை காண்க. எழுவாய், மேலை மந்திரத்தினின்றும் வந்தது. ``கோலம் மதியவள்`` எனப் பண்புப் பெயர் பண்பி வினையொடு முடிந்தது.
இதனால், திரிபுரை தியானத்தில் அவளைப் பற்றி அறியத் தக்க பெருமைகள் கூறப்பட்டன. தனமும், ஒளியும் உருவவழியாக ஞானத்தை உணர்த்தின.