ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Paadal

  • 1. நவகுண்ட மானவை நானுரை செய்யின்
    நவகுண்டத் துள்எழும் நற்றீபந் தானும்
    நவகுண்டத் துள்எழும் நன்மைகள் எல்லாம்
    நவகுண்ட மானவை நானுரைப் பேனே.
  • 10. இடங் கொண்ட பாதம் எழிற்சுட ராக
    நடங்கொண்ட பாதம்நன் னீராம் அவற்குச்
    சகங்கொண்ட கைஇரண் டாறும் தழைப்ப
    முகங்கொண்ட செஞ்சுடர் முக்கண னார்க்கே.
  • 11. முக்கணன் றானே முழுச்சுட ராயவன்
    அக்கணன் றானே அகிலமும் உண்டவன்
    திக்கண னாகி திசைஎட்டும் கண்டவன்
    எக்கணன் றன்னுக்கும் எந்தை பிரானே.
  • 12. எந்தை பிரானுக் கிருமூன்று வட்டமாய்த்
    தந்தைதன் முன்னமே சண்முகன் தோன்றலால்
    கந்தன் சுவாமி கலந்தங் கிருத்தலால்
    மைந்தன் இவனென்று மாட்டுக்கொள் ளீரே.
  • 13. மாட்டிய குண்டத்தி னுள்எழு வேதத்துள்
    ஆட்டி கால்ஒன் றிரண்டும் அலர்ந்திடும்
    வாட்டிய கையிரண் டொன்று பதைத்தெழ
    நாட்டுஞ் சுரர்இவர் நல்லொளி யானே.
  • 14. நல்லொளி யாக நடந்துல கெங்கும்
    கல்லொளி யாகக் கலந்துள் இருந்திடும்
    சொல்லொளி யாகத் தொடர்ந்த உயிர்க்கெலாம்
    கல்லொளி கண்ணுளு மாகிநின் றானே.
  • 15. நின்றஇக் குண்ட நிலைஆறு கோணமாய்ப்
    பண்டையில் வட்டம் பதைத்தெழும் ஆறாறுங்
    கொண்டஇத் தத்துவம் உள்ளே கலந்தெழ
    விண்ணுளும் என்ன விடுக்கலும் ஆமே.
  • 16. எடுக்கின்ற பாதங்கள் மூன்ற(து) எழுத்தைக்
    கடுத்த முகம் இரண் டாறுகண் ணாகப்
    படித்தெண்ணும் நாஏழு கொம்பொரு நாலு
    அடுத்தெழு கையான தந்தமி லாற்கே.
  • 17. அந்தமி லானுக் ககலிடந் தானில்லை
    அந்தமி லானை அளப்பவர் தாமில்லை
    அந்தமி லானுக் கடுத்தசொல் தானில்லை
    அந்தமி லானை அறிந்துகொள் பத்தே.
  • 18. பத்திட்டங் கெட்டிட்டு ஆறிட்டு நாலிட்டு
    மட்டிட்ட குண்டம் மலர்ந்தெழு தாமரை
    கட்டிட்டு நின்று கலந்தமெய் ஆகமும்
    பட்டிட்டு நின்றது பார்ப்பதி பாலே.
  • 19. பார்ப்பதி பாகன் பரந்தகை நாலஞ்சு
    காற்பதி பத்து முகம்பத்துக் கண்களும்
    பூப்பதி பாதம் இரண்டு சுடர்முடி
    நாற்பது சோத்திர நல்லிருப் பத்தஞ்சே.
  • 2. உரைத்திடுங் குண்டத்தி னுள்ளேமுக் காலும்
    வகைத்தெழு நாற்கோண நன்மைகள் ஐந்தும்
    பகைத்திடு முப்புரம் பார் அங்கி யோடே
    மிகைத்தெழு கண்டங்கள் மேலறி யோமே.
  • 20. அஞ்சிட்ட கோலம் அளப்பன ஐயைந்தும்
    மஞ்சிட்ட குண்டம் மலர்ந்தங் கிருத்தலால்
    பஞ்சிட்ட சோதி பரந்த பரஞ்சுடர்
    கொஞ்சிட்ட வன்னியைக் கூடுதல் முத்தியே.
  • 21. முத்திநற் சோதி முழுச்சுட ராயவன்
    கற்றற்று நின்றார் கருத்துள் இருந்திடும்
    பற்றற்று நாடிப் பரந்தொளி யூடுபோய்ச்
    செற்றற் றிருந்தவர் சேர்ந்திருந் தாரே.
  • 22. சேர்ந்த கலைகளும் சேரும்இக் குண்டமும்
    ஆர்ந்த திசைகளும் அங்கே அமர்ந்திடும்
    பாய்ந்தஐம் பூதமும் பார்க்கின்ற வன்னியைக்
    காய்ந்தவர் என்றும் கலந்தவர் தாமே.
  • 23. மெய்கண்ட மாம்விரி நீர்உல கேழையும்
    உய்கண்டஞ் செய்த ஒருவனைச் சேருமின்
    செய்கண்ட ஞானம் திருந்திய தேவர்கள்
    பொய்கண்ட மில்லாப் பொருள்கலந் தாரே.
  • 24. கலந்திரு பாதம் இருகர மாகும்
    அலர்ந்திரு குண்டம் அகாரத்தோர் மூக்கு
    மலர்ந்தெழு செம்முகம் மற்றைக்கண் நெற்றி
    உலர்ந்திருங் குஞ்சி அங் குத்தம னார்க்கே.
  • 25. உத்தமன் சோதி உளன்ஒரு பாலனாய்
    மத்திம னாகி மலர்ந்தங் கிருந்திடும்
    பச்சிம திக்கும் பரந்து குழிந்தன
    சத்திமா னாகத் தழைத்த கொடியே.
  • 26. கொடிஆறு சென்று குலாவிய குண்டம்
    அடிஇரு கோணமாய் அந்தமும் ஒக்கும்
    படிஏ ழுலகும் பரந்த சுடரை
    மடியாது கண்டவர் மாதன மாமே.
  • 27. மாதன மாக வளர்கின்ற வன்னியைச்
    சாதனமாகச் சமைந்த குருஎன்றும்
    போதன மாகப் பொருந்த உலகாளும்
    பாதன மாகப் பிரிந்தது பார்த்தே.
  • 28. பார்த்திடம் எங்கும் பரந்தெழு சோதியை
    ஆத்தம தாகவே ஆய்ந்தறி வார்இல்லை
    காத்துட லுள்ளே கருதி யிருந்தவர்
    மூத்துடல் கோடி யுகங்கண்ட வாறே.
  • 29. உகங்கண்ட ஒன்பது குண்டமும் ஒக்க
    அகங்கண்ட யோகிஉள் நாடி எழுப்பும்
    பகங்கண்டு கொண்டஅப் பாய்கரு ஒப்பச்
    சகங்கண்டு கொண்டது சாதன மாமே.
  • 3. மேலறிந் துள்ளே வெளிசெய்த அப்பொருள்
    காலறிந் துள்ளே கருத்துற்ற செஞ்சுடர்
    பாரறிந் தண்டம் சிறகற நின்றது
    நானறிந் துள்ளுளே நாடிக்கண் டேனே.
  • 30. சாதனை நாலு தழல் மூன்று வில்வயம்
    வேதனை வட்டம் விளைவாறு பூநிலை
    போதனை போ(து) அஞ்சு பொற்கய வாரணம்
    நாதனை நாடும் நவகோடி தானே.
  • 4. கொண்டஇக் குண்டத்தினுள்ளெழு சோதியால்
    அண்டங்கள் ஈரேழும் ஆக்கி அழிக்கலாம்
    பண்டையுள் வேதம் பரந்த பரப்பெலாம்
    இன்றுசொல் நூலாய் எடுத்துரைத் தேனே.
  • 5. எடுத்தஅக் குண்டத் திடம்பதி னாறில்
    பதித்த கலைகளும் பாலித்து நிற்கும்
    கதித்தனல் உள்ளெழக் கண்டுகொள் வார்க்கே
    கொதித்தெழும் வல்வினை கூடகி லாவே.
  • 6. கூடமுக் கூடத்தி னுள்ளெழு குண்டத்துள்
    ஆடிய ஐந்தும் அகம்புற மாய்நிற்கும்
    பாடிய பன்னீ ரிராசியும் அங்கெழ
    நாடிக்கொள் வார்கட்கு நற்சுடர் தானே.
  • 7. நற்சுட ராகும் சிரம் முக வட்டமாம்
    கைச்சுட ராகும் கருத்துற்ற கைகளில்
    பைச்சுடர் மேனி பதைப்பற்ற லிங்கமும்
    நற்சுடர் ராய்எழும் நல்லதென் றாளே.
  • 8. நல்லதென் றாளே நமக் குற்ற நாயகம்
    சொல்லதென் றாளே சுடர்முடி பாதமா
    மெல்லநின் றாளை வினவகில் லாதவர்
    கல்லதன் தாளையும் கற்றும்வின் னாளே.
  • 9. வின்னா இளம்பிறை மேவியகுண்டத்துச்
    சொன்னா இரண்டும் சுடர்நாகம் திக்கெங்கும்
    பன்னாலு நாகம் பரந்த பரஞ்சுடர்
    என்னாகத் துள்ளே இடங்கொண்ட வாறே.