ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 4. நவகுண்டம்

பதிகங்கள்

Photo

மெய்கண்ட மாம்விரி நீர்உல கேழையும்
உய்கண்டஞ் செய்த ஒருவனைச் சேருமின்
செய்கண்ட ஞானம் திருந்திய தேவர்கள்
பொய்கண்ட மில்லாப் பொருள்கலந் தாரே.

English Meaning:
Celestials Reached Lord Through Jnana Sacrifices

The sea-girt worlds several,
The Lord redeemed;
That One Being Great, do you seek;
The Celestials in Jnana sacrifice excelled
Verily merged in Him,
That is Truth Unalloyed.
Tamil Meaning:
கடல் சூழ்ந்த நிலவுலகின் ஏழு பொழில்களையும் (தீவுகளையும்) உயிர் உய்தி பெறுதற்கு உரிய உலகமாக அமைத்த ஒருவனாகிய சிவனை அவ்விடங்களில் பிறந்துள்ள நீங்கள் வழிபாட்டினால் அடையுங்கள், அவனால் படைக்கப்பட்ட அவ் வுலகம் முழுதையும் அறியும் அறிவைப் பெற்ற தேவர்களும் அதன்கண் சென்று அவனை வழிபட்டே மெய்ப் பொருளைப் பெற்றார்கள் ஆதலால்.
Special Remark:
`மெய்க்கண்டம், பொய்க்கண்டம்` என்பவற்றின் ஒற்று எதுகை நோக்கித் தொகுத்தலாயிற்று. `விரிநீர் உலகு ஏழையும் மெய்க்கண்டமாகவும், உய்கண்டமாகவும் செய்த ஒருவன்` என்க. ``கண்டம்`` நான்கில் இறுதி ஒன்றும் தடை; அஃதாவது பாசம். ஏனைய, உலகம். `மெய்யுணர்வு பெறுதற்கு ஏற்ற இடம் நிலவுலகமே` என்பது சிவநூல் துணிபு. அதனுள்ளும், பரத கண்டமும், அதனுள்ளும் குமரிக் கண்டமும் சிறந்தன என அவை கூறும் என்க. ``இந்தப் பூமி சிவன் உய்யக் கொள்கின்ற ஆறு`` எனவும், 1 ``வானிடத் தவரும் மண்மேல் வந்து அரன்றனை அற்சிப்பர்`` 2 எனவும் போந்தன காண்க.
இதனால், வழிபாட்டுலகமாகிய இவ்வுலகத்தின் சிறப்பு உணர்த்தும் முகத்தால் இதன்கண் செயற்பாலாகிய முத்தீ வழிபாட்டின் சிறப்பு உணர்த்தப்பட்டது.