ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 4. நவகுண்டம்

பதிகங்கள்

Photo

நல்லதென் றாளே நமக் குற்ற நாயகம்
சொல்லதென் றாளே சுடர்முடி பாதமா
மெல்லநின் றாளை வினவகில் லாதவர்
கல்லதன் தாளையும் கற்றும்வின் னாளே.

English Meaning:
Sakti Affirms Sacredness of Sacrificial Fire

``Great`` She said, Our mother of esteem high;
``That the Word`` (Five letter), said She,
Who radiant from head to foot in tenderness stood;
They who do not ask of Her,
Though learned unto roots of learning,
Yet are in confusion distract.
Tamil Meaning:
வேள்வித் தீயினது சிறப்பைக் கூறிய அந்தச் சிவ சக்தியே, `நம்மைச் செலுத்தி நிற்பன மந்திரங்களே` என அருளிச் செய் தாள். அம் மந்திரங்களையே தனக்கு முடி முதல் அடிவரையும் உள்ள உறுப்புக்களாகக் கொண்டு அருளோடு நிற்கின்ற அவளது உண்மை யை உணராதவர்கள், எல்லாக் கல்விகளையும் அடி தொடங்கி முறையாகக் கற்றும் அக்கல்விகள் பகலில் காணப்படுகின்ற வான வில்போல வெறுந்தோற்ற மாத்திரையாய்ப் பயன்படாதொழியும்.
Special Remark:
சொல், இங்கு மந்திரம். மென்மை - அருள். கல், கல்வி; முதனிலைத் தொழிற் பெயர். நாள் - பகல்.
இதனால்,` அங்கியங் கடவுட்கு மந்திரமும் வடிவாம்` என்பது பெறுதற் பொருட்டு யாவர்க்கும் மந்திரம் வடிவாமாறு கூறப்பட்டது.