ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 4. நவகுண்டம்

பதிகங்கள்

Photo

நற்சுட ராகும் சிரம் முக வட்டமாம்
கைச்சுட ராகும் கருத்துற்ற கைகளில்
பைச்சுடர் மேனி பதைப்பற்ற லிங்கமும்
நற்சுடர் ராய்எழும் நல்லதென் றாளே.

English Meaning:
Holy Effects of Sacrificial Fire

The head and face will glow in a halo of light,
On the hand, Fire will appear if so they will
The glowing body trembling and shaking
Will give forth the shining Linga
Good indeed in worship of sacrificial Fire-pit!
Thus said Sakti Divine.
Tamil Meaning:
அங்கியங் கடவுட்குச் சிரசும், முகமும், கொழுந் தாகிய சுடர்களாம். பக்கங்களில் படர்ந்து தாவுகின்ற சுடர்கள் கைகளாம், கீழ்நின்று பசிய நிறத்தை உள்ளே உடையதாய் எழுகின்ற இடை ஒளிப் பிழம்பே மேனியாம், இவ்வாறாதலின் வேள்வித் தீயே சிவனது வடிவமாகவும் எண்ணப்படுகின்ற நன்மையை உடைய தாகின்றது என்று சிவசக்தி கூறினாள்.
Special Remark:
முதல் `நற் சுடர்` - சிறந்த சுடர்; அவை கொழுந்தாகி மேலே உள்ளன. சிரம் கூறவே சிகையும் கொள்ளப்படுவதாம். `நற் சுடர் சிரமாகும்; முக வட்டமாம்` என்க. `கைகளில் ஆகும் சுடர் கை,` எனக் கொண்டு கூட்டி உரைக்க, `கை` இரண்டில் பின்னது பக்கம் `பைஞ்சுடர்` என்பது வலிந்து நின்றது. பதைப்பு அறுதலாவது, சாந்தம் உறுதல். எழவே, `சிவலிங்கம்` என்றதாயிற்று. ஈற்றடியை `நற்சுடர் பதைப்பற்ற லிங்கமுமாய் எழும் நல்லது` எனக் கூட்டி உரைக்க. சிவ சத்தி கூறியதாக அருளிச் செய்தது, அவளே வேள்விக்குரிய மந்திரங் களைப் பிரேரிப்பவளாதல் பற்றி. தீயின் வடிவத்தை இவ்வாறு அங் கியங் கடவுள் வடிவாகக் கற்பித்துக் காட்டினார், மேற்கூறிய பிராசாத கலா நியாசத்தையும், பிறவற்றையும் செய்தற் பொருட்டு. ``லிங்கம்`` என்றது, வியத்த லிங்கத்தை என்பது மேல் உறுப்புகளைக் கற்பித்துக் காட்டியதனால் கொள்க. இதனுள்ளும் இன எதுகை வந்தது.
இதனால், வேள்வித் தீ தீக் கடவுளாய் நிற்குமாறு கூறப்பட்டது.