ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 4. நவகுண்டம்

பதிகங்கள்

Photo

பார்த்திடம் எங்கும் பரந்தெழு சோதியை
ஆத்தம தாகவே ஆய்ந்தறி வார்இல்லை
காத்துட லுள்ளே கருதி யிருந்தவர்
மூத்துடல் கோடி யுகங்கண்ட வாறே.

English Meaning:
Tend Kundalini Fire and Live Long

The Fire that rises and spreads everywhere
They seek not in truth and know not;
Those who have tended it within their body,
Live long, long,
For ten millions aeons, as it were.
Tamil Meaning:
உருவத்தால் ஓம குண்டத்தளவிலே நின்ற தாயினும், ஆற்றலால் எவ்விடத்தும் நிறைந்து நிற்கும் ஓமாக்கினியைத் தமக்கு எல்லா நலனையுந் தரும் அருந்துணையாக ஆராய்ந்தறிபவர் ஒருவரும் இல்லை, அவ்வாறு அறிந்து அதனை முறைப்படி ஓம்பி, மனத்திலும் தியானிப்பவர் உடல், ஆண்டுகள் பல சென்றாலும் அழிவின்றிப் பல யுகங்களைக் கண்டு கொண்டிருந்தவாறு பல இடங்களில் கேட்கப் படுகின்றது.
Special Remark:
`பார்த்த` என்பதன் அகரம் தொகுத்தலாயிற்று. `கேட்கப் படுகின்றது` என்பது சொல்லெச்சம்.
இதனால், வேள்வி வேட்டல் காய சித்தியையும் தருதல் கூறப்பட்டது.