ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 4. நவகுண்டம்

பதிகங்கள்

Photo

மாட்டிய குண்டத்தி னுள்எழு வேதத்துள்
ஆட்டி கால்ஒன் றிரண்டும் அலர்ந்திடும்
வாட்டிய கையிரண் டொன்று பதைத்தெழ
நாட்டுஞ் சுரர்இவர் நல்லொளி யானே.

English Meaning:
When Lord is Visioned in Ajna (Eye-Brow Centre)

Within the sacrificial pit, that is Muladhara,
Arises the Vedic Fire that is Kundalini,
When controlled breath through Sushmna in unison flows,
The two petals in Ajna Centre open;
When the two paths are closed
And Kundalini rises through the Sushumna
They who thus worship and vision,
Are verily Celestials of Light Divine.
Tamil Meaning:
அகமும், புறமும் ஒற்றுமைப்படக் காட்டிய குண்டங்களில் எழுகின்ற தீயினுள்ளே, `காற்று` என்னும் ஒன்று, `இடைகலை, பிங்கலை` என இரண்டாய் இயங்கும். அவ் இயக்கத் திற்கு உரிய வழி மூன்றில் இரண்டு தடுக்கப்பட, ஒன்றில் மட்டுமே இயங்கச் செய்வோர் மேற்கூறிய ஒளியால் தேவராக மதிக்கப்படுவர்.
Special Remark:
வேத மந்திரத்தின் வடிவாதல் பற்றி வேள்வித் தீயை, ``வேதம்`` என்றே கூறினார். ஆட்டிய - பொருள்களைச் சலிப்பிக் கின்ற. `ஒன்றே` என்னும் தேற்றேகாரம் தொகுத்தல் பெற்றது. `இரண்டு மாய்` எனவும், `கையிரண்டு வாட்டியவாக` எனவும் ஆக்கம் வருவித்துக் கொள்க. கை - பக்கம்; என்றது வழியை. `ஒன்றில் பதைத்து எழ` என உருபு விரிக்க. `எழ நாட்டும் இவர் நல்லொளி யானே சுரராவர்` என்க. `சிவபுத்திரனாய் நிற்கும் அக்கினியையும் யோகியாக்கித் தாமும் யோகராயிருந்து வேட்பார் பெரும் பயன் எய்துவர்` என்றவாறு.
இதனால், அழல் ஓம்புதற்கு ஒரு சிறப்புமுறை கூறப்பட்டது.