ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 4. நவகுண்டம்

பதிகங்கள்

Photo

நல்லொளி யாக நடந்துல கெங்கும்
கல்லொளி யாகக் கலந்துள் இருந்திடும்
சொல்லொளி யாகத் தொடர்ந்த உயிர்க்கெலாம்
கல்லொளி கண்ணுளு மாகிநின் றானே.

English Meaning:
Lord is Light Divine

As Light Splendrous, He pervades worlds all,
Latent as sparkle in gem,
He is immanent in all;
For all those who sought Him as Light of Divine Word
He stood as beacon light on hill top,
And as the light within the eye too.
Tamil Meaning:
மொழியையே அறிவாகப் பெற்று இயங்கிவரும் மக்களுயிர்க்கெல்லாம் மாணிக்க ஒளிபோல உள்நின்று, கண்மணி போல உதவி வருகின்ற சிவன், இவ்வுலக முழுதிலும் வேள்வித் தீயாக விளங்கியே திருக்கோயிற் படிமங்களில் உள்ளொளியாய்க் கலந்து நிற்கின்றான்.
Special Remark:
மூன்றாம் அடிமுதலாகத் தொடங்கி உரைக்க. ``கல்`` இரண்டில் முன்னது அதனாலாகிய படிமம். பின்னது மாணிக்கம். ``ஆகி`` என்பதை அதன்முன் உள்ள ``கல்லொளி`` என்பதனோடும் கூட்டுக.
இதனால், அழலோம்பல் திருக்கோயிற் சிறப்பிற்கு இன்றி யமையாததாதல் கூறப்பட்டது.