ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 4. நவகுண்டம்

பதிகங்கள்

Photo

உத்தமன் சோதி உளன்ஒரு பாலனாய்
மத்திம னாகி மலர்ந்தங் கிருந்திடும்
பச்சிம திக்கும் பரந்து குழிந்தன
சத்திமா னாகத் தழைத்த கொடியே.

English Meaning:
As Sacrificial Fire Blazed High

Within the Fire the Holy One arose cherubic;
In middle He youthful blossomed;
As the Sacrificial Fire blazed thus,
The sphere of forehead (Ajna Centre) broadened and, deepened,
And there He was,
His Sakti tender as a vine.
Tamil Meaning:
சிவபெருமான் வாகீசுவரிக்கு நாயகனாய் இன் புற்று மகிழ்ந்ததனால் உண்டாகிய ஓமத்தீ குண்டத்தின் கீழ்ப்பாதியோடு நில்லாமல் மேற்பாதியிலும் பரத்தலால், அங்கு உள்ள இடங்களும் வேறுபடும். அந்நிலையில் அச்சிவனே அந்தத் தீயுருவில் முதலிலே குழவிப் பருவத்தனாயும், பின்பு காளைப் பருவத்தனாயும் இருப்பான்.
Special Remark:
இதன்கண் உள்ள அடிகளை `ஈறு, ஈற்றயல், முதல், இரண்டு` என்னும் முறையிற் கொண்டு உரைக்க. `ஒரு சோதிப் பாலனாய் உளன்; சோதி மத்திமனாய் இருந்திடும்` என்க. வடக்கில் தோற்றுவிக்கப்பட்ட தீ வலமாக எழுந்து மேற்கில் பரந்து ஓங்கும் என்பார் ``பச்சிம திக்கும்`` என்றார். இதனால், `வடக்கில் பாலனாய்த் தோன்றி வளர்ந்த சிவாக்கினி மேற்கில் காளையாய் நிற்பன்`` என்பது பெறப்பட்டது. ``சத்திமானாக`` என்பதற்கு எழுவாய் `உத்தமன்` என்பதேயாம். தழைத்த கொடி - உண்டாய கொடி; கொடி, தீயின் சுடர். சிவவேள்வியில் தீயை வாகீசுவர வாகீசுவரியர்தம் புதல்வனாகத் தோற்றுவிக்கும் முறை சிவாகமங்களுட் கூறப்படுதல் மேலும் (1008) குறிப்பிடப்பட்டது. இதனுள் இன எதுகை வந்தது.
இதனால், சிவசத்திகளது கூறாகிய ஓமாக்கினியது நிலைகள் கூறப்பட்டன.