ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. மலமில்லைமாசில்லை மானாபி மானம்
    குலமில்லை கொள்ளும் குணங்களு மில்லை
    நலமில்லை நந்தியை ஞானத்தி னாலே
    பலம்மன்னி அன்பில் பதித்துவைப் பார்க்கே.
  • 10. கொண்ட சுழியும் குலவரை உச்சியும்
    அண்டரும் அண்டத் தலைவரும் ஆதியும்
    எண்டிசை யோரும்வந் தென்கைத் தலத்துளே
    உண்டனர் நான்இனஇ உய்ந்தொழிந் தேனே.
  • 11. நமன்வருன் ஞானவாள் கொண்டே எறிவன்
    சிவன்வரின் நான்உடன் போவது திண்ணம்
    பவம்வரும் வல்வினை பண்டே அறுத்தேன்
    தவம்வரும் சிந்தைக்குத் தான்எதி ராமே.
  • 12. சித்தம் சிவமாய் மலம்மூன்றும் செற்றவர்
    சுத்த சிவமாவர் தோயார் மலபந்தம்
    கத்தும் சிலுகும் கலகமும் கைகாணார்
    சத்தம் பரவிந்து தானாம்என் றெண்ணியே.
  • 13. நினைப்பும் மறப்பும் இலாதவர் நெஞ்சம்
    வினைப்பற் றறுக்கும் விமலன் இருக்கும்
    வினைப்பற் றறுக்கும் விமலனைத் தேடி
    நினைக்கப் பெறில்அவன் நீளியன் ஆமே.
  • 14. சிவபெரு மானென்று நானழைத் தேத்தத்
    தவபெரு மானென்று தான்வந்து நின்றான்
    அவபெரு மான்` என்னை ஆளுடை நாதன்
    பவபெரு மானைப் பணிந்துநின் றேனே.
  • 15. பணிந்துநின் றேன்பர மாதி பதியைத்
    துணிந்துநின் றேன்இனி மற்றொன்றும் வேண்டன்
    அணிந்துநின் றேன்உடல் ஆதிப் பிரானைத்
    தணிந்துநின் றேன்சிவன் தன்மைகண் டேனே.
  • 16. என்நெஞ்சம் ஈசன் இணையடி தான்சேர்ந்து
    முன்னஞ்செய் தேத்த முழுதும் பிறப்பறும்
    தன்னெஞ்சம் இல்லாத் தலைவன் தலைவிதி
    பின்னஞ்செய்(து) என்னைபக் பிணக்கறுத் தானே.
  • 17. பிணக்கறுத் தான்பிணி மூப்பறுத் தெண்ணும்
    கணக்கறுத் தாண்டனன் காண்நந்தி என்னைப்
    பிணக்கறுத் தென்னுடன் முன்வந்த துன்பம்
    வணக்கலுற் றேன்சிவம் வந்தது தானே.
  • 18. சிவன்வந்து தேவர் குழாமுடன் கூடப்
    பவம்வந் திடநின்ற பாசம் அறுத்திட்(டு)
    அவன்எந்தை ஆண்டருள் ஆதிப் பெருமான்
    அவன்வந்தென் உள்ளே அகப்பட்ட வாறே.
  • 19. கரும்பும்செந் தேனும் கலந்ததோர் காயத்தில்
    அரும்பும் அக் கந்தமும் ஆகிய ஆனந்தம்
    விரும்பியே உள்ளம் வெளியுறக் கண்டபின்
    கரும்பும்முன் கைத்தது தேனும் புளித்ததே.
  • 2. ஒழிந்தேன் பிறவி உறவெனும் பாசம்
    கழிந்தேன் கடவுளும் நானும்ஒன் றானேன்
    அழிந்தாங் கினிவரும் ஆக்கமும் வேண்டன்
    செழுஞ்சார் புடைய சிவனைக்கண் டேனே.
  • 20. உள்ளம் சரியாதி ஒட்டியே மீட்டென்பால்
    வள்ளல் அருத்தியே வைத்த வளம்பாடிச்
    செய்வன எல்லாம் சிவமாகக் காண்டலால்
    கைவளமின்றிக் கருக்கடந் தேனே.
  • 21. மீண்டார் கமலத்துள் அங்கி மிகச்சென்று
    தூண்டா விளக்கின் தகளிநெய் சோர்தலும்
    பூண்டாள் ஒருத்தி புவனசூ டாமணி
    மாண்டான் ஒருவன்கை வந்தது தானே.
  • 22. அன்புள் ளுருகி அழுவன் அரற்றுவன்
    என்பும் உருக இராப்பகல் ஏத்துவன்
    என்பொன் மணியை இறைவனை ஈசனைத்
    தின்பன் கடிப்பன் திருத்துவன் நானே.
  • 3. ஆலைக் கரும்பும் அமுதும் அக் காரமும்
    சோலைத்தண் ணீரும் உடைத்தெங்கள் நாட்டிடைப்
    பீலிக்கண் ணன்ன வடிவுசெய் வாளொரு
    கோலப்பெண் ணாட்குக் குறையொன்று மில்லை.
  • 4. ஆராலும் என்னை அமட்டஒண் ணாதினிச்
    சீரார் பிரன்வந்தென் சிந்தை புகுந்தனன்
    சீராடி அங்கே திரிவதல் லா(து)இனி
    யார்பாடுஞ் சாரா அறிவறிந் தேனே.
  • 5. பிரிந்தேன் பிரமன் பிணித்ததோர் பாசம்
    தெரிந்தேன் சிவகதி செல்லும் நிலையை
    அரிந்தேன் வினையை அயில்மன வாளால்
    முரிந்தேன் புரத்தினை முந்துகின் றேனே.
  • 6. ஒன்றுகண் டீர்உல குக்கொரு தெய்வமும்
    ஒன்றுகண்டீர்உல குக்குயி ராவதும்
    நன்றுகண் டீர்இன் னமச்சிவா யப்பழம்
    தின்றுகண் டேற்கிது தித்தித்த வாறே.
  • 7. சந்திரன் பாம்பொடுஞ் சூடும் சடாதரன்
    வந்தென்னை ஆண்ட மணிவிளக் கானவன்
    அந்தமும் ஆதியும் இல்லா அரும்பொருள்
    சிந்தையின் மேவித் தியக்கறுத் தானே.
  • 8. பண்டெங்கள் ஈசன் நெடுமால் பிரமனைக்
    கண்டங் கிருக்கும் கருக்கும் கருத்தறி வார்இல்லை
    விண்டங்கே தோன்றி வெறுமன மாடியின்
    துண்டங் கிருந்ததோர் தூறது வாமே.
  • 9. அன்னையும் அத்தனும் அன்புற்ற தல்லது
    அன்னையும் அத்தனும் ஆர்அறி வார்என்னை?
    அன்னையும்அத்தனும் யானும் உடன் இருந்(து)
    அன்னையும் அத்தனும் யான்புரந் தேனே.