ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 27. அணைந்தோர் தன்மை

பதிகங்கள்

Photo

ஆராலும் என்னை அமட்டஒண் ணாதினிச்
சீரார் பிரன்வந்தென் சிந்தை புகுந்தனன்
சீராடி அங்கே திரிவதல் லா(து)இனி
யார்பாடுஞ் சாரா அறிவறிந் தேனே.

English Meaning:
They are Inseparable in God

None can intimidate me hereafter,
The Lord came and entered my thoughts,
There will I sport and wander in joy;
No more will I with anyone else be.
Tamil Meaning:
முதலடியை இறுதியில் கூட்டி, `இனிஎன்னை ஆராலும் அமட்ட ஒண்ணாது` என மாற்றியுரைக்க. அமட்டுதல் - அசைத்தல்; நிலைகலங்கச் செய்தல். சீர் - சிறப்பு. பிறர் ஒருவருக்கும் இல்லாத அருட்குணம். `சிந்தை` என்றது அறிவை, `அச்சீராடி எனச் சுட்டு வருவிக்க. ஆடுதல் - பயிலுதல் ஊடாடுதல்` என்னும் வழக்கையும் நோக்குக. அங்கு அவனிடத்தே. திரிதல் - உலாவுதல்; செயற்படுதல்.
Special Remark:
பாடு - பக்கம். சாரா அறிவு, சாராமைக்கு ஏதுவாய அறிவு. `தான் சுதந்திரனாய் உள்ளவனைச் சார்ந்தால், நாமும் சுதந்திரமாய் வாழலாம்` என்னும் அறிவு.
``தாம் ஆர்க்குங் குடியல்லாத் தன்மை யான
சங்கரன் ... ... ... ... ... ... ...
கோமற்கே நாம் என்றும் மீள் ஆளாய்க்
கொய்ம்மலராச் சேவடியிணையே குறுகி னோமே``
என அருளிச் செய்தமையும் காண்க.
``அறிவு அறிந்தேன்`` என்றது, `அறிவைப் பெற்றேன் என்றவாறு.
இதன் பொருள் வெளிப்படை.
இதனால், `சிவனை, பெறும் பொருளாகப் பெற்றார். எவ் வாற்றானும் பிறர்க்கு, அல்லது பிறவற்றில் அடிமையாகாது, வேண்டிய வேண்டியாங்கு எய்தி இன்புறுதல் கூறப்பட்டது. ``ஒன்றாலும் குறை வில்லை`` (திருமுறை - 6.98.1.) என்ற அருள் மொழிமையயும் காண்க.