ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 27. அணைந்தோர் தன்மை

பதிகங்கள்

Photo

சந்திரன் பாம்பொடுஞ் சூடும் சடாதரன்
வந்தென்னை ஆண்ட மணிவிளக் கானவன்
அந்தமும் ஆதியும் இல்லா அரும்பொருள்
சிந்தையின் மேவித் தியக்கறுத் தானே.

English Meaning:
Doubt-Free State of the God Realized

The Lord who wears moon and serpent on His matted hair,
He, the jewelled lamp
That accepted me in His service,
The Being Rare,
Neither beginning nor end has,
He entered my thoughts and made me doubt-free.
Tamil Meaning:
இதன் பொருள் வெளிப்படை.
Special Remark:
`சந்திரனும், பாம்பும் பகைப் பொருள்கள்` என்பது புராணக் கொள்கை, அவை யிரண்டையும் சிவன் ஒருங்கே தனது முடியில் அணிந்துள்ளான். இது, `சிவன் உயிர்களை நடுவு நிலையில் நின்றே நோக்கியிருளுவன்` என்னும் குறிப்பையும், `உயிர்கல் அவை சார்ந்துள்ள உடம்பு காரணமாகப் பகைகொள்வனன்றி, இயற்கையில் அவற்றிடைப் பகையேதும் இல்லை என்னும் குறிப்பையும் உடைய தாகும். ஆகவே ``பாம்பும், மதியும் புனலும் தம்மிற் - பகை தீர்த்துடன் வைத்த பண்பா போற்றி``9 என்றது காண்க. இத்தகைய நடுவு நிலைமையும், பேரருளும், ஆதியந்தம் அற்ற நித்தியத் தன்மையும் உடைய சிவன் இனிது விளங்கப் பெற்ற நல்லறிவையுடைய பெரி யோர்க்குத் தியக்கம் (கலக்கம்) தோன்றுமாறில்லை என்பது குறிப்பு.
இதனால், `மோன சமாதி யுற்றார்க்கு நிலைகலங்கும் தன்மை யில்லை` என்பது ஏதுவுடன் குறிப்பால் உணர்த்தப்பட்டது.