
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 27. அணைந்தோர் தன்மை
பதிகங்கள்

பிரிந்தேன் பிரமன் பிணித்ததோர் பாசம்
தெரிந்தேன் சிவகதி செல்லும் நிலையை
அரிந்தேன் வினையை அயில்மன வாளால்
முரிந்தேன் புரத்தினை முந்துகின் றேனே.
English Meaning:
How They Hastened to the City of GodI freed myself of fetters
The Creator bound me with,
I learned the way of reaching Siva;
I smote Karmas with the sharp sword of mind,
I stood ego lost;
And now I hasten toward the City of God.
Tamil Meaning:
நான் இப்பொழுது, முன்பு பிரமன் என் தலையில் எழுதி நியமித்த கட்டினின்றும் நீங்கிவிட்டேன். `ஊழ்வினைகள் வந்து என்னை ஒன்றும் செய்யா` என்பதாம்.) சிவனை அடையும் வழியைத் தெரிந்து கொண்டேன். இப்பொழுது நான்செய்யும் செயல்களால் நான் பின்பு நுகரக் கடவனவாகப் புண்ணியமோ, அல்லது பாவமோ எதுவும் முளைக்காதபடி `ஞானம்` என்னும் கூரிய வாளால் அவைகளை அறுத்தெறிந்தேன்ய (`எனக்கு ஆகாமியம் இல்லை` என்றபடி.) என்னை வெளியில் செல்லாதபடி தடுத்து வைத்துள்ள உடம்பாகிய சிறைக் கூடம் இடிந்த பாழாய்விடப் பெற்றேன். ஆகவே, நான் எங்கும் செல்கின்றேன். (கருவிகளின் வயப்பட்ட ஏக தேச நிலை நீங்கி, வியாபகமாகப் பெற்றேன்` என்பதாம்.)Special Remark:
``நிலை`` என்றது வழியை. கதி - புகலிடம்.``தொல்லையில் வருதல் போலத்
தோன்றிரு வினைய துண்டேல்,
அல்லொளி புரையும் ஞானத்
தழலுற அழிந்து போமே``*
எனவும்
``ஏன்ற வினை உடலோ டேகும்;இடை யேறும்
தோன்றில், அருளே சுடும்``*
எனவும் கூறுபவ ஆகலான், ``மனம்`` என்று ஞானமேயாதல் அறிக. ``ஞான வாள் ஏந்தும்; ஐயர் நாதப் பறை அறைமின்`` * என்னும் திருவாசகத்தையும் காண்க.
``தண்டா யுதமும்,திரிசூ லமும் விழத்
தாக்கி உன்னைத்
திண்டாட வெட்டி விழவிடு வேன்;செந்தில்
வேலனுக்குத்
தொண்டா கியஎன் அவிரோத ஞானச்
சுடர்வடிவாள்
கண்டா யடா அந்த காவந்து பார்சற்றென்
கைக்கெட்டவே,``
``பட்டிக் கடாவில் வரும் அந்த கா! உனைப்
பாரறிய
வெட்டிப் புறங்கண் டலாது விடேன்; வெய்ய
சூரனைப் போய்
முட்டிப் பொருதசெவ் வேற்பெருமான்
திருமுன்பு நின்றேன்;
கட்டிப் புறப்படடா! சத்தி வாள் என்றன்
கையது வே``
என எவ்விடத்தும் ஞானமே வாளாக உருவகிக்கப்படுதலை அறிக. (``சத்தி`` என்பது சிலேடை வகையால், `சத்தி` என்னும் ஆயுதத்தையும், ஞானத்தையும் ஒருங்கே குறித்து நின்றது. சத்தி, முருகனது படைக்கலங்களுள் சிறந்த ஒன்றாதல் தெளிவு.)
புரம் - உடம்பு. முரிந்தேன் - முரிந்ததாகப் பெற்றேன்.
இதனால், மோன சமாதியை எய்தினவர்க்குப பிராரத்தமும் ஆகாமியமும் இலலையாதலும், அதனானே தனு கரண புவன போகங்களாகிய மாயையின் மயக்கம் நிகழாமையும் கூறப்பட்டன. இக்கருத்தினை நாயனார் முன் தந்திரத்தில்.
``தன்னை யறிந்திடுந் தத்துவ ஞானிகள்;
முன்னை வினையும் முடிச்சை அவிழ்ப்பர்கள்;
பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள்
சென்னியில் வைத்த திருவரு ளாலே``
எனக் கூறியருளினார். சஞ்சித சுன்மம் குருவின் திருக்கண் நோக்கத்தால் எரிசேர்ந்த வித்தபுபோல அப்பொழுதே கெட்டொழிந்தது. சஞ்சித கன்மம் நீங்காத வரையில் ஞானம் பிறவாது. ஆகவே, ஞானியர்க்குச் சஞ்சித கன்மம் இல்லை.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage