ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 27. அணைந்தோர் தன்மை

பதிகங்கள்

Photo

சித்தம் சிவமாய் மலம்மூன்றும் செற்றவர்
சுத்த சிவமாவர் தோயார் மலபந்தம்
கத்தும் சிலுகும் கலகமும் கைகாணார்
சத்தம் பரவிந்து தானாம்என் றெண்ணியே.

English Meaning:
They are in Nada and Bindu

Their thoughts are Siva-filled;
They have destroyed Malas three
Suddha Siva they have become;
To Mala`s bondage they return not;
Shouts, confusion and fights (of this world),
They indulge not in;
Immmersed are they in Nada and Para Bindu.
Tamil Meaning:
மும்மலங்களையும் நீக்கித் தமது அறிவு சிவனது அறிவே யோகப் பெற்ற ஞானிகள், சீவராகாது, இயல்பாகவே பாசம் இன்மையால் தூயனாய் உள்ள சிவனேயாவர், ஆகையால் அவர்கள் மாயா மலமாகிய உடம்போடு கூடி, உலகில் உலவினாராயினும் அவற்றால் அவர் கட்டுறார். `சிவன் இல்லை` என அழித்துப் பேசுவாரது அழிப்புரையும், சிவனை அடைதற்கு இத்துணை விரைவு ஏன்` என மயக்க உரை கூறுவாரத் ஆரவார உரையும் `இவர்களது உரைகள் யாவும் பாசங்களுள் ஒன்றாகிய சுத்த மாயை அளிவினவே என எண்ணித்தம்பால் அணுகக் காணாதவராவர்.
Special Remark:
முதலடி அவ்வாறு கூறப்பட்தாயினும், அதனை `மலம் மூன்றுஞ் செற்றுச் சித்தம் சிவம் ஆயவர்` என்றதாகவே கொள். ``சித்தம்` என்றது அறிவை. சிலுகு - புன்மொழி. அவை நாத்திகர் பேசும் நாத்திக உரை. கலகம், ``ஆத்தம் ஆனார் அயலார் கூடி நாத்திகமாகப் பேசும்`` மயக்க உரை. சொற்கள் யாவும் சுத்தமாயா காரியமேயாயின் பாசத்திள் நின்று கூறுவாரது சொல் அந்த மாயா நாதமே யாக, திருவருளில் நின்றாரது சொல் அருள் நாதமாம். `அவற்றுள் இங்குக் குறிக்கப்பட்டவர் சொல் மாய நாதமே` என்பதை, ``சத்தம் பரவிந்து மாயை. `சத்தம்` என்னும் வடசொல், `சொல்` என்றே பொருள் தருமாயினும், இங்கு, `வெற்றாரவாரம்` என்னும் நயத்தையும் தோற்றுவித்தது.
பின்னிரண்டடிகளில் வரும்பொருளை நிறுவுதற்கு முன்னிரண்டடிகள் அநுவாதமாய் வந்தன.
இதனால், மோன சமாதி எய்தினோர் அதன் சிறப்பை உணர மாட்டாதார் கூறுவனவற்றிற்குச் செவி கொடார்` என்பது கூறப்பட்டது.