ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 27. அணைந்தோர் தன்மை

பதிகங்கள்

Photo

நினைப்பும் மறப்பும் இலாதவர் நெஞ்சம்
வினைப்பற் றறுக்கும் விமலன் இருக்கும்
வினைப்பற் றறுக்கும் விமலனைத் தேடி
நினைக்கப் பெறில்அவன் நீளியன் ஆமே.

English Meaning:
Long They Live

They who cognize
Neither remembering nor forgetting,
In their thoughts,
The Pure One, who uproots Karmas, Stand;
Seeking the Pure One,
Who uproots Karmas
They who think of Him, long long live.
Tamil Meaning:
நினைப்பு, மனம் முதலிய கருவிகள் செயற் படுதலால் நிகழ்வது. மறப்பு, கருவிகள் செயற்படாது ஒடுங்குதலால் நிகழ்வது. கருவிகள் இல்லாத பொழுது அறிவு நிகாழமை ஆணவ மல மறைப்பினாலாம், ஆகவே, ஆணவ மலம் நீங்கினால் கருவிகளால் ஆவதொன்றில்லை. ஆன்ம அறிவு எப்பொழுதும் அறிவாயே இருக்கும்; அறியாமையாகாது. இவை ஒளி குறைந்த கண்ணிற்குக் கண்ணாடி வேண்டாது, எப்பொழுதும் பார்வை நிகழ்வதும் போல்வன வாகும். ஆணவ மலத்தால் மறைக்கப்பட்ட அறிவு ஒளி குறையாத கண் போல்வது. பெத்தான்மாக்களது அறிவு ஆணவ மலத்தால் மறைக்கப் பட்டிருத்தலால் அவ்வறிவு மேற்குறித்த நினைப்பும், மறப்புமாய் நிலைமாறிக் கொண்டேயிருக்கும். முத்தான்மாக்களின் அறிவு ஆணவ மலம் நீங்கப் பெற்றமையால் மாற்றம் இன்றி, அறிவாயே விளங்கும். அதனால் அவைகட்குச் சிவம் மறைதல் இன்றி, விளங்கியே நிறுகும்.
Special Remark:
நினைப்பே சகலம்; மறப்பே கேவலம் இவைகளை, `பகல், இரவு` எனச் சாத்திரங்கள் குறியீட்டுச் சொல்லாற் கூறும். நினைப்பும், மறப்பும் இன்றி அறிவு ஒரே நிலையில் நிற்புது இரவு பகல் அற்ற இடமாகக் கூறப்படும்.
``இரவு பகலில்லா இன்பவெளி யூடே
விரவி விரவிநின் றுந்தீபற;
விரைய விரையநின் றுந்தீபற``9
என்றது திருவுந்தியார்.
இவ்வாற்றால், ``வினைப்பற்றறுக்கும் விமலன், நினைப்பும் மறப்பும் இலாதவர் நெஞ்சத்து இருக்கும்`` எனவு நினைப்பும் உள்ளவர் நினைப்பினாலே அவனைப்பற்ற முயன்றால் அவன் கிட்டான் ஆதலின், ``அவவைத் தேடி நினைக்கப் பெறில் நீளியன் ஆம்`` என்றும் கூறினார். நீளியன் - சேய்மையன். ``தேடி நினைக்கப் பெறில்`` என்றே கூறஇனாராயினும், `நினைத்துத் தேடப் பெறில்` என்றலே கருத்தென்க. விமலன் - பரிசுத்தன். என்னே, அவன் ஆவண மலத்தில் அகப்பட்டான்` என்பதைக் குறிப்பால் உணர்த்தினார் என்க. இனி, `அவன் ஆணவத்தில் அகப்படா னாயினும் வளர்பிறை மதி இருளைச் சிறிது சிறிதாக ஓட்டி வருதல்போல அவன் உயிர்களில் மறைந்து நின்று ஆணவத்தை நீக்கியே வருகின்றான் என்பதை ``வினைப் பற்று அறுக்கும்`` என்பதனால் குறித்தார். `நெஞ்சத்து` என்னும் அத்துச் சாரியை தொகுக்கப்பட்டது.
இதனால், மோன சமாதி யுற்றார்குச் சிவன் கரவின்றி விளங்குதல் எதுக் காட்டி விளக்கப்பட்டது.