ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 27. அணைந்தோர் தன்மை

பதிகங்கள்

Photo

ஆலைக் கரும்பும் அமுதும் அக் காரமும்
சோலைத்தண் ணீரும் உடைத்தெங்கள் நாட்டிடைப்
பீலிக்கண் ணன்ன வடிவுசெய் வாளொரு
கோலப்பெண் ணாட்குக் குறையொன்று மில்லை.

English Meaning:
They Want Nothing

Cane of sugar, rice of fineness, garments of richness
And water of green glades too,
Our and possesses;
By the Grace of lovely Mother
That is peacock shaped,
Nothing we want, nothing, indeed.
Tamil Meaning:
ஆலையில் இடப்பட்ட கரும்பும், சோறும், வெல்லக் கட்டியும், சோலையின் நடுவில் உள்ள பொய்கை நீரும் ஆகியவற்றை உடையது எங்கள் நாடு. அதில் அழகிய சாலம் வல்ல பெண்ணொருத்தி யுள்ளாள். அவள் மயிலின் தோகையில் காணப்படும் வியத்தகு `புள்ளிகளைப்போல் பல பொருள்களை விளக்கத்தக்க வகையில் தோற்றுவிப்பாள். அதனால் பலர்க்குப்பல பயன்கள் விளைதலால் அவட்குப்புகழ் உளதேயன்றிச் சிறிதும் இகழ்வில்லை.
Special Remark:
இம்மந்திரமும் மறைபொருட் கூற்றாகவே செய்யப் பட்டது. நாடு - நின்மலாவத்தை, ஆலைக்கரும்பு - உழைத்துப் பயன் பெறல் வேண்டும். அது நின்மல சாக்கிரம். சோறு, வாளா எடுத்து விழுங்கப்படும். அது நின்மல சொப்பனம். வெறும் சோறு சுவை யில்லாதது போல இதில் சிவானந்தம் இனிது விளையாது, அதன் உண்மை மட்டும் விளங்கும. வெல்லக்கட்டி வாயில் இட்டவுடன் இனிக்கும். இது நின்மல சுழுத்தி. துரியமும் உடன் நிகழும். இவற்றில் சிவானந்தத் தோற்றம் உளதாகும். சோலைத் தண்ணீர், குளிர்ச்சி யுடையதாய் உடல் வெப்பம் தணித்து, உண்ணீர் வேட்கையையும் தணித்து, நீந்தி விளையாடவும் இடமாம், இது நின்மல துரியாதீதம். இதில் சிவானந்த மேலீடு உளதாம். இவற்றையெல்லாம் தந்து நிற்பது அருட்டத்தி. அதுவே கோலப்பெண். இது திரோதான சத்தியைப்போல இடரை விளவியாது, இன்பத்தையே விளைத்தலால், இதனை உபசாரமாகக் கூட, `மலம்` என ஒருவரும் குறைத்துக் கூறார். ஆகவே, `இவட்குக் குறை ஒன்றும் இல்லையே` என்றார். ஏகாரம், தேற்றம். மோன சமாதியை அடைந்தோர் உடல் உள்ள அளவும் ஒரோ ஒரு கால் அதனின்றும் நீங்கிப் புறமோக்குடையராதலும் உண்டு. அந் நிலையிலும் அவர் பண்டை நிலை வந்து பற்றாதபடி நின்மலா வத்தையில் நிற்றல் அல்லது, அதற்குக் கீழ்ப்பட்ட மேலாலவத்தை மத்தியாலவத்தை கீழாலவத்தைகளில் வாரார் என்பதும் கூறியவாறு. அணைந்தோருள் தம்மையும் உளப்படுத்திக் கூறினார் என்க. `உடைத் தாகிய எங்கள் நாட்டிடையுள்ள பெண்ணாட்குக் குறையொன்றும இல்லையே` என்க.
இதனால், மோன சமாதி யுற்றருள் ஒரோர்கால்மீட்சி உறுவாரதுசெயல் கூறப்பட்டது.
``நேசமொடுத் திருவடிக்கீழ் நீங்காதே தூங்கும்
நீனைவுடையோர் நின்றிடுவர் நிலையதுவே யாகி
ஆசையொடும் அங்கும இங்கும் ஆகி அலருவோர்
அரும்பாசம் அறுக்கும் வகை அருலின் வழியே [உரைப்போம்.l
என்றார் சிவஞான சித்தியிலும்.