ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
    வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
    தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
    கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே.
  • 10. ஆன்ஐந்தும் ஆட்டி அமரர் கணந்தொழத்
    தான்அந்த மில்லாத் தலைவன் அருளது
    தேன்உந்து மாமலர் உள்ளே தெளிந்த(து)ஓர்
    பான்ஐங் குணனும் படைத்துநின் றானே.
  • 11. உழைக்கொண்ட பூநீர் ஒருங்குடன் ஏந்தி
    மழைக்கொண்ட மாமுகில் போற்சென்று வானோர்
    தழைக்கொண்ட பாசம் தயங்கிநின் றேத்திப்
    பிழைப்பின்றி எம்பெரு மான்அரு ளாமே.
  • 12. வெள்ளக் கடல்உள் விரிசடை நந்திக்கு
    உள்ளக் கடற்புக்கு ஓர்சுமை பூக்கொண்டு
    கள்ளக் கடல்விட்டுக் கைதொழ மாட்டாதார்
    அள்ளற் கடலுள் அழுந்துகின் றாரே.
  • 13. கழிப்படு தண்கடற் கௌவை உடைத்து
    வழிப்படு வார்மலர் மொட்டறி யார்கள்
    பழிப்படு வார்பலரும் பழி வீழ
    வெளிப்படு வார்உச்சி மேவிநின் றானே.
  • 14. பயனறி வொன்றுண்டு பன்மலர் தூவிப்
    பயனறி வார்க்கரன் தானே பயிலும்
    நயனங்கள் மூன்றுடை யான்அடி சேர
    வயனங்க ளால்என்றும் வந்துநின் றானே.
  • 15. ஏத்துவர் மாமலர் தூவித் தொழுதுநின்
    றார்த்தெம தீசன் அருட்சே வடிஎன்றன்
    மூர்த்தியை மூவா முதல்உரு வாய்நின்ற
    தீர்த்தனை யாரும் திதித்துண ராரே.
  • 16. தேவர்கள் ஓர்தீசை வந்துமண் ணோடுறும்
    பூவோடு நீர்சுமந் தேத்திப் புனிதனை
    மூவரிற் பன்மை முதல்வராய் நின்றருள்
    நீர்மையை யாவர் நினைக்கவல் லாரே.
  • 17. உழைக்கவல் லார்நடு நீர்மலர் ஏந்திப்
    பிழைப்பின்றி ஈசன் பெருந்தவம் பேணி
    இழைக்கொண்ட பாதத்(து) இனமலர் தூவி
    மழைக்கொண்டல் போலவே மன்னிநில் லீரே.
  • 18. வென்று விரைந்து விரைபணி என்றனர்
    நின்று பொருந்த நிறைபணி நேர்படத்
    துன்று சலமலர் தூவித் தொழுதிடிற்
    கொண்டிடும் நித்தனும் கூறிய தன்றே.
  • 19. சாத்தியும் வைத்தும் சயம்புஎன் றேற்றியும்
    ஏத்தியும் நாளும் இறையை அறிகிலார்
    ஆத்தி மலரிட் டகத்தழுக் கற்றக்கால்
    மாத்திக்கே செல்லும் வழிஅது வாமே.
  • 2. வேட்டவி யுண்ணும் விரிசடை நந்திக்குக்
    காட்டவும் யாமிலம் காலையும் மாலையும்
    ஊட்டவி யாவன உள்ளங் குளிர்விக்கும்
    பாட்டவி காட்டுதும் பால்அவி யாமே.
  • 20. ஆவிக் கமலத்தின் அப்புறத் தின்புறம்
    மேவித் திரியும் விரிசடை நந்தியைக்
    கூவிக் கருதிக் கொடுபோய்ச் சிவத்திடைத்
    தாவிக்கும் மந்திரம் தாம்அறி யாரே.
  • 21. ஊழிதோ றூழி உணர்பவர்க் கல்லது
    ஊழிவ் வுயிரை உணரவுந் தானொட்டா(து)
    ஆழி அமரும் அரிஅயன் என்றுளோர்
    ஊழி கடந்தும்ஓர் உச்சி யுளானே.
  • 3. பான்மொழி பாகன் பராபரன் றானாகும்
    மான சதாசிவன் றன்னைஆ வாகித்து
    மேன்முகம் ஈசான மாகவே கைக்கொண்டு
    சீன்முகம் செய்யச் சிவனவன் ஆமே.
  • 4. நினைவதும் வாய்மை மொழிவது மல்லால்
    கனைகழல் ஈசனைக் காண்பரி தாகும்
    கனைகழல் ஈசனைக் காணவல் லார்கள்
    புனைமலர் நீர்கொண்டு போற்றவல் லாரே.
  • 5. மஞ்சனம் மாலை நிலாவிய வானவர்
    நெஞ்சினுள் ஈசன் நிலைபெறு காரணம்
    அஞ்சமுது ஆம்உப சாரம்எட் டெட்டொடும்
    அஞ்சலி யோடும் கலந்தற்சித் தார்களே.
  • 6. புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு
    அண்ணல் அதுகண் டருள்புரி யாநிற்கும்
    எண்ணிலி பாவிகள் எம்மிறை ஈசனை
    நண்ணறி யாமல் நழுவுகின் றார்களே
  • 7. சீர்நந்தி கொண்டு திருமுக மாய்விட்ட
    பேர்நந்தி என்னும் பிறங்கு சடையனை
    நாநொந்து நொந்து வருமளவும் சொல்லப்
    பேர்நந்தி யென்னும் பிதற்றொழி யேனே.
  • 8. மறப்பதுற் றெவ்வழி மன்னிநின் றாலும்
    சிறப்பொசு பூநீர் திருந்தமுன் ஏந்தி
    மறப்பின்றி நின்னை வழிபடும் வண்ணம்
    அறப்பெற வேண்டும் அமரர் பிரானே.
  • 9. ஆரா தனையும் அமரர் குழாங்களும்
    நீரார் கடலுள் நிலத்துள வாய்நிற்கும்
    பேரா யிரமும் பிரான்திரு நாமமே
    ஆராய் வுழியெங்கள் ஆதிப் பிரானே.