ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 11. சிவ பூசை

பதிகங்கள்

Photo

சாத்தியும் வைத்தும் சயம்புஎன் றேற்றியும்
ஏத்தியும் நாளும் இறையை அறிகிலார்
ஆத்தி மலரிட் டகத்தழுக் கற்றக்கால்
மாத்திக்கே செல்லும் வழிஅது வாமே.

English Meaning:
Way to Goal Supreme

Adorn Him with garland of flowers
Place them at His feet
Praise Him as the Lord Primal;
Those that have daily prayed to Him
And yet have known Him not
Let them adore Him with Athi flower, so dear to Him
And pray, their base nature be cleansed of impurities;
—That the way to Goal Supreme.

Tamil Meaning:
சிவனை நாள்தோறும் இலிங்கததில் வைத்து, `சுயம்பு` முதலிய பெயர்களை மிகவும் சொல்லி மலர்களைச் சாத்தியும். திருப்பாடல்கள் பலவற்றால் மிகத் துதித்தும் நின்றால் காணுதல் கூடும். அஃது இயல்வதொன்றுறாய் இருக்கவும் அதனைச் செய்யாது புறக்கணித்துப் போவதால் உலகத்தார் சிவனைக் காண்கிலர். ஆயினும் இங்குக் கூறியவாறு ஆத்தி முதலிய மலர்களைத் தூவி அருச்சித்தலே அக அழுக்காகிய மும்மலங்களும் நீங்குதற்குரிய வழி. மும்மலங்களும் நீங்கினால் பெருந்திசையாகிய வீட்டு நிலையிற் செல்லுதல் எளிதாகும்.
Special Remark:
``வைத்தும்`` என்பதை முதலில் வைத்து உரைக்க. வைத்தல் - தாபித்தல். `இலிங்கத்தில்` என்பது அதிகாரத்தால் வந்தது. ஏற்றுதல் - மிகுவித்தல். சிவனுக்கு ஆத்தியும், கொன்றையும் சிறப்பாக உரியன ஆதலின் அவற்றுள் ஒன்றை விதந்து கூறினார்.
இதனால், `மலம் நீங்கி வீடு எய்துதற்கு வழி சிவ பூசையே` என்பதும்கூறப்பட்டது.