ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 11. சிவ பூசை

பதிகங்கள்

Photo

வென்று விரைந்து விரைபணி என்றனர்
நின்று பொருந்த நிறைபணி நேர்படத்
துன்று சலமலர் தூவித் தொழுதிடிற்
கொண்டிடும் நித்தனும் கூறிய தன்றே.

English Meaning:
The Lord Receives Worship

To perform The Lord`s worship in manner appropriate
Senses subdue, hasten, and quick at His Feet fall;
And offering water and flower daily worship
He will accept you, thus I said, even in days of yore.
Tamil Meaning:
உலகியலை அது மயக்காதவாறு வென்று போக்கி, `இனியாம் விரைந்து செய்யத்தக்க பணியாது` என எண்ணி நின்றவர் யவரும், என்றும் நல்லதொரு பணியில் நின்று சிவனை அடை வதற்கும், சிவனுக்கு மன நிறைவான பண தமக்குக் கிடைத்தற்கும் மிகுந்த நீலையும், பூவையும் கொண்டு ஆட்டியும், தூவியும் வழி பட்டால், சிவன் அதனை விரும்பி ஏற்றுக் கொள்வான். இது படைப்புக் காலத்திற்றானே அப்பெருமானால் சொல்லப்பட்டது.
Special Remark:
``எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர், தாம்விரும்பும்
உண்மை யாவது பூசனை`` 8
என உரைத்தருளினமையை நோக்குக.
``என்றனர்`` என்பது வினையாலணையும் பெயர். `என்றனர் தொழுதிடில் நித்தனும் கொண்டிடும். இஃது அன்றே கூறியது` என முடிக்க மலருக்குரிய தூவுதல் கூறினமையின், சலத்திற்குரிய சுட்டுதல் வருவிக்கப்பட்டது. `நித்தலும்` என்பது பாடமாயின் `சிவன்` என்பது வருவிததுக் கொள்க. ``கூறியது`` என்னும் பயனிலைக்கு `அவன்` என்னும் எழுவாய் தோன்றாது கூறியது சிவாகமங்களில்` என்க.
இதனால், துறந்தார் சிவபூசையைக் குறவின்றி நிறைவாகச் செய்து சிறந்த பயனைப் பெறற் பாலர்`` என்பது கூறப்பட்டது.