
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 11. சிவ பூசை
பதிகங்கள்

புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு
அண்ணல் அதுகண் டருள்புரி யாநிற்கும்
எண்ணிலி பாவிகள் எம்மிறை ஈசனை
நண்ணறி யாமல் நழுவுகின் றார்களே
English Meaning:
Pray and Receive GraceThe devout are they with flower and water pray
The Lord seeing that bestows His Grace on them
Countless are the sinners that know not how our Lord to approach
Thus they slip by in ignorance deep.
Tamil Meaning:
`சிவனை அடைதற்குச் செயற்பாலதாகிய தவம் யாது` எனத் தேர்பவர்க்கு, பூவும், நீருமே சாதனங்களாகும். அவை எவவிடத்தும் எளிதிற் கிடைப்பனவே. அவை சாதனங்களாதல் எவ்வாறு எனின், நீரைச் சொரிந்து பூவைச் சாத்துதலாகிய அதைக் கண்டவுடனே சிவன் அதனைச் செய்தவர்க்கு அருள்புரிகின்றான். அங்ஙனமாகவும், நல்லூழ் இல்லாத பலர் இதனைச் செய்யாது வாளா பொழுது போக்கிப் பிறப்பில் வீழ்கின்றனர்.Special Remark:
\\\"இஃது அவர் வினையிருந்தவாறு\\\" என்பது குறிப் பெச்சம். \\\"உண்டு, உண்டு\\\" என்றது, அவற்றின் எளிமையும், முட்டின்மையும் கூறியவாறு.\\\"கற்றுக் கொள்வன வாயுள; நாவுள;
இட்டுக் கொள்வன பூவுள; நீருள;
கற்றைச் செஞ்சடை யானுளன்; நாமுளோம்;
எற்றுக்கோ நமனால் முனிவுண்பதே\\\"l #
என்றதிலும் `எம் வினையே காரணம்` என்பதே குறிப்பு.
இதனால், சிவபூசை செயலால் எளிதாய்ப் பயனாற் பெரிதாயினும் அது நல்லூழ் உடையார்க்கன்றி ஆகாமை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage