ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 29. சருவ வியாபகம்

பதிகங்கள்

Photo

இருக்கின்ற எண்டிசை அண்டம் பா தாளம்
உருக்கொடு தன்நடு ஓங்க இவ் வண்ணம்
கருக்கொடே எங்கும் கலந்துநின் றானே
திருக்கொன்றை வைத்த செழுஞ்சடை யானே.

English Meaning:
He is One and Many

The Lord is with creation all
None know His coming and going,
He is distant, He is near;
He is constant, He is Sankara,
He is the Primal Being;
Multiple He is, One He is,
He Our Primal Lord.
Tamil Meaning:
`தோன்றல், நிற்றல், ஒடுங்கல்` என்னும் முத்தொழில்களில் நடுவணதாகிய நிற்றல் தொழிலுடையவாய் உள்ள உலகங்கள் அனைத்தும் தனது உருவத்திற்குள்ளே `இவ்வாறு அடங்கியிருக்க` எனச் சங்கற்பித்துச் சிவன் அவற்றில் நிறைந்து நிற்கின்றான்.
Special Remark:
`இவ்வண்ணம் ஓங்கக் கருக்கொடு` என மாற்றியுரைக்க. ஓங்குதல் - நிலைத்து நிற்றல். கருக்கொள்ளுதல், திருவுளத்திற்குள் சங்கற்பித்தல். ஈற்றடி `சிவன்` என்னுந் துணையாய் நின்றது. ``ஓங்கக் கருக்கொடே எங்கும் கலந்திருந்தான்`` என்றதனால், `அவனது சங்கற்பத்தானே உலகம் நிலை பெற்றுள்ளது` என்பதும், `பிறவாறு சங்கற்பிக்கின் அவ்வாறே ஆம்` என்பதும் `பிறர்போலக் கரணத்தாலன்றிச் சங்கற்பத்தாலே எல்லாம் செய்வன்` என்பதும் போந்தன. ``தன்`` என்றது தனது உருவத்தை. அவனது உருவம் சத்தியேயாதலை நினைக.
இதனால், சிவனது சருவ வியாபகச் சிறப்புடன், இயைபு பற்றி அவன் செயலாற்றும் முறையும் கூறப்பட்டது.