ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 4. சதாசிவ லிங்கம்

பதிகங்கள்

Photo

சமயத் தெழுந்த அவத்தையீ ரைந்துள
சமயத் தெழுந்த இராசியீ ராறுள
சமயத் தெழுந்த சரீரம்ஆ றெட்டுள
சமயத் தெழுந்த சதாசிவந் தானே.

English Meaning:
Sakti evolves still further

In that Truth arose the Avastas (States of Awareness) twice five;
In that Truth arose the Rasis (Zodiacal houses) twice six
In that Truth arose the Tattvas (Body Constituents) twice forty-eight;
In that Truth arose the Sadasiva Supreme.
Tamil Meaning:
முன்னை மந்திரத்தில் தலைமை பற்றி, `சமயம்` என்றே சொல்லப்பட்ட சைவ சமயத்தில் இறைவனுக்கு அவத்தைகள் பத்துச் சொல்லப்படுகின்றன. (அவத்தை - நிலை, அவை நவந்தரு பேதங்களுள் மேல் நிற்கும் நான்கொழிய ஏனை ஐந்தும் `அணுபட்சம், சம்புபட்சம்` எனத் தனித்தனி இவ்விரண்டாவனவாம்.)
உலகத்தில் சூரியன் முதலிய கோள்கள் இயங்கும் இராசிகள் பன்னிரண்டு சொல்லப்படுதல் போலச் சைவத்தில் இறைவன் தானங்கள் பன்னிரண்டு சொல்லப்படுகின்றன. (அவை பிராசாத கலைகள் இருக்கும் இடங்களாம்.)
சைவத்தில், `இறைவனுக்குத் திருமேனிகள் ஆறு` என்றும், `எட்டு` என்றும் சொல்லப்படுகின்றன. (அவை முறையே ஆறு அத்துவாக்களும், அட்ட மூர்த்தங்களுமாகும்.)
இவை அனைத்துமாய் நிற்பது சைவ சமயத்தில் சொல்லப் படும் சதாசிவ லிங்கம்.
Special Remark:
சைவ சமயத்தில் சொல்லப்படுவன சைவாகமங் களில் சொல்லப்பட்டனவே யாதலின், `இவ்வாறெல்லாம் சைவா கமத்துள் சொல்லப்பட்டன` என்றபடி `இலிங்க மூர்த்தத்தில் இதனுட் கூறிய வாறெல்லாம் சிவன் நிற்றல் கருதி வழிபாடு செய்யப்படும்` என்பது உணர்த்தியவாறு.
இதனால் சைவ சமயத்தில், எல்லாம் சதாசிவ லிங்கமாகக் கொள்ளப்படுதல் கூறப்பட்டது.