
ஓம் நமசிவாய
The Next Song will be automatically played at the end of each song.
Tandhiram
Padhigam
- ஒன்பதாம் தந்திரம் - 1. குருமட தரிசனம்
- ஒன்பதாம் தந்திரம் - 2. ஞானகுரு தரிசனம்
- ஒன்பதாம் தந்திரம் - 3. பிரணவ சமாதி
- ஒன்பதாம் தந்திரம் - 4. ஒளிவகை
- ஒன்பதாம் தந்திரம் - 5. பஞ்சாக்கரம் - தூலம்
- ஒன்பதாம் தந்திரம் - 6. பஞ்சாக்கரம் - சூக்குமம்
- ஒன்பதாம் தந்திரம் - 7. அதி சூக்கும பஞ்சாக்கரம்
- ஒன்பதாம் தந்திரம் - 8. காரண பஞ்சாக்கரம்
- ஒன்பதாம் தந்திரம் - 9. மகா காரண பஞ்சாக்கரம்
- ஒன்பதாம் தந்திரம் - 10. திருக்கூத்து
- ஒன்பதாம் தந்திரம் - 11. சிவானந்தக் கூத்து
- ஒன்பதாம் தந்திரம் - 12. சுந்தரக் கூத்து
- ஒன்பதாம் தந்திரம் - 13. பொற்பதிக் கூத்து
- ஒன்பதாம் தந்திரம் 14. பொற்றில்லைக் கூத்து
- ஒன்பதாம் தந்திரம் - 14. பொற்றில்லைக் கூத்து
- ஒன்பதாம் தந்திரம் - 15. அற்புதக் கூத்து
- ஒன்பதாம் தந்திரம் - 16. ஆகாசப் பேறு
- ஒன்பதாம் தந்திரம் - 17. ஞானோதயம்
- ஒன்பதாம் தந்திரம் - 18. சத்திய ஞானானந்தம்
- ஒன்பதாம் தந்திரம் - 19. சொரூப உதயம்
- ஒன்பதாம் தந்திரம் - 20. ஊழ்
- ஒன்பதாம் தந்திரம் - 21. சிவ ரூபம்
- ஒன்பதாம் தந்திரம் - 22. சிவ தரிசனம்
- ஒன்பதாம் தந்திரம் - 23. முத்தி பேதம் கரும நிருவாணம்
- ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை
- ஒன்பதாம் தந்திரம் - 25. மோன சமாதி
- ஒன்பதாம் தந்திரம் - 26. வரையுரை மாட்சி
- ஒன்பதாம் தந்திரம் - 27. அணைந்தோர் தன்மை
- ஒன்பதாம் தந்திரம் - 28. தோத்திரம்
- ஒன்பதாம் தந்திரம் - 29. சருவ வியாபகம்
Paadal
-
1. ஏழு வளைகடல் எட்டுக் குலவரை
ஆழும் விசும்பினில் அங்கி மழை வளி
தாழும் இருநிலத் தன்மை யதுகண்டு
வாழ நினைக்கில் அஃது ஆலயம் ஆமே.
-
10. முகத்தினிற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்தினிற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்குத்தன் தாய்தன் மணாளனோ டாடிய
சுகத்தினைச் சொல்லெனில் சொல்லுமா றெங்ஙனே.
-
11. அப்பினில் உப்பென அத்தன் அணைந்திட்டுச்
செப்பு பராபரம் சேரபர மும்விட்டுக்
கப்புறு சொற்பதம் மாளக் கலந்தமை
எப்படி அப்படி என்னும்அவ் வாறே.
-
12. கண்டார்க் கழகிது காஞ்சிரத் தின்பழம்
தின்றார்க் கறியலாம் அப்பழத் தின்சுவை
பெண்டான் நிரம்பி மடவிய ளானால்
கொண்டான் அறிவன் குணம்பல தானே.
-
13. நந்தி யிருந்தான் நடுவுத் தெருவிலே
சந்தி சமாதிகள் தாமே ஒழிந்தன
உந்தியி னுள்ளே உதித்தெழும் சோதியைப்
புந்தி னாலே புணர்ந்துகொண் டேனே.
-
14. விதறு படாவண்ணம் வேறிருந் தாயந்து
பதறு படாதே பழமறை பார்த்துக்
கதறிய பாழைக் கடந்தந்தக் கற்பனை
உதறிய பாழில் ஒடுங்குகின் றேனே.
-
15. வாடா மலர்புணை சேவடி வானவர்
கூடார் அறநெறி நாடொறும் இன்புறச்
சேடார் கமலச் செழுஞ்சுட ருட்சென்று
நாடா அமுதுற நாடார் அமுதமே.
-
16. அதுக்கென் றிருவர் அமர்ந்தசொற் கேட்டும்
பொதுக்கெனக் காமம் புலப்படு மாபோல்
சதுக்கென்று வேறு சமைந்தாரக் காணின்
மதுக்கொன்றைத் தாரான் வளந்தரும் அன்றே.
-
17. தானும் அழிந்து தனமும் அழிந்து
ஊனும் அழிந்து உயிரும் அழிந்துடன்
வானும் அழிந்து மனமும் அழிந்தபின்
நானும் அழிந்தமை நானறி யேனே.
-
18. நிற்றல் இருத்தல் கிடத்தல் நடைஓடல்
பெற்றுஅக் காலும் திருவருள் பேராமல்
சற்றியல் ஞானம்தந்து ஆனந்தம் தங்கவே
உற்ற பிறப்பற்று ஒளிர்ஞான நிட்டையே.
-
19. இருளும் வெளியும் இரண்டையும் மாற்றிப்
பொருளிற் பொருளாய்ப் பொருந்தஉள் ளாகி
அருளால் அழிந்திடும் அத்தன் அடிக்கே
உருளாத கல்மனம் உற்றுநின் றேனே.
-
2. ஆலிங் கனம்செய்து அகம்சுடச் சூலத்துச்
சாலிங் கமைத்துத் தலைமை தவிர்த்தனர்
கோலிங் கமைந்தபின் கூபப் பறவைகள்
மாலிங்கு வைத்தது முன்பின் வழியே.
-
20. ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் பராபரம்
ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் சிவகதி
ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் உணர்வினை
ஒன்றிநின் றேபல ஊழிகண் டேனே.
-
3. நின்றார் இருந்தார் கிடந்தார் எனல்இல்லாச்
சென்றார்தம் சித்தமே மோன சமாதியாம்
மன்றேயும் அங்கே மறைபொருள் ஒன்றுண்டு
சென்றாங் கணைந்தவர் சேர்கின்ற வாறே.
-
4. காட்டும் குறியும் கடந்தஅக் காரணம்
ஏட்டின் புறத்தில் எழுதிவைத் தென்பயன்
கூட்டும் குருநந்தி கூட்டிடி னல்லதை
யாட்டின் கழுத்தில் அதர்கிடந் தற்றே.
-
5. மறப்பது வாய்நின்ற மாயநன் நாடன்
பிறப்பினை நீக்கிய பேரரு ளாளன்
சிறப்புடை யான்திரு மங்கையும் தானும்
உறக்கமில் போகத்(து) உறங்கிடுந் தானே.
-
6. துரியங்கள் மூன்றும் கடந்தொளிர் சோதி
அரிய துரியம் அதன்மீது மூன்றாய்
விரிவு குவிவு விழுங்கி உமிழ்ந்தே
உரைஇல் அனுபூ திகத்தில்உள் ளானே.
-
7. உருவிலி ஊன்இலி ஊனம்ஒன் றில்லி
திருவிலி தீதிலி தேவர்க்கும் தேவன்
பொருவிலி பூதப் படையுடை யாளி
மருவிலி வந்தென் மனம்புகுந் தானே.
-
8. கண்டறி வார் இல்லைக் கயத்தின் நந்தியை
எண்டிசை யோரும் `இறைவன்`என் றேத்துவர்
அண்டங் கடந்த அளவிலா ஆனந்தம்
தொண்டர் முகந்த துறைஅறி யோமே.
-
9. தற்பர மல்லன் சதாசிவன் றானல்லன்
நிட்கள மல்லன் சகள நிலையல்லன்
அற்புத மாகி அனுபவக் காமம்போல்
கற்பனை யின்றிக் கலந்துநின் றானே.