ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. ஏழு வளைகடல் எட்டுக் குலவரை
    ஆழும் விசும்பினில் அங்கி மழை வளி
    தாழும் இருநிலத் தன்மை யதுகண்டு
    வாழ நினைக்கில் அஃது ஆலயம் ஆமே.
  • 10. முகத்தினிற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
    அகத்தினிற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
    மகட்குத்தன் தாய்தன் மணாளனோ டாடிய
    சுகத்தினைச் சொல்லெனில் சொல்லுமா றெங்ஙனே.
  • 11. அப்பினில் உப்பென அத்தன் அணைந்திட்டுச்
    செப்பு பராபரம் சேரபர மும்விட்டுக்
    கப்புறு சொற்பதம் மாளக் கலந்தமை
    எப்படி அப்படி என்னும்அவ் வாறே.
  • 12. கண்டார்க் கழகிது காஞ்சிரத் தின்பழம்
    தின்றார்க் கறியலாம் அப்பழத் தின்சுவை
    பெண்டான் நிரம்பி மடவிய ளானால்
    கொண்டான் அறிவன் குணம்பல தானே.
  • 13. நந்தி யிருந்தான் நடுவுத் தெருவிலே
    சந்தி சமாதிகள் தாமே ஒழிந்தன
    உந்தியி னுள்ளே உதித்தெழும் சோதியைப்
    புந்தி னாலே புணர்ந்துகொண் டேனே.
  • 14. விதறு படாவண்ணம் வேறிருந் தாயந்து
    பதறு படாதே பழமறை பார்த்துக்
    கதறிய பாழைக் கடந்தந்தக் கற்பனை
    உதறிய பாழில் ஒடுங்குகின் றேனே.
  • 15. வாடா மலர்புணை சேவடி வானவர்
    கூடார் அறநெறி நாடொறும் இன்புறச்
    சேடார் கமலச் செழுஞ்சுட ருட்சென்று
    நாடா அமுதுற நாடார் அமுதமே.
  • 16. அதுக்கென் றிருவர் அமர்ந்தசொற் கேட்டும்
    பொதுக்கெனக் காமம் புலப்படு மாபோல்
    சதுக்கென்று வேறு சமைந்தாரக் காணின்
    மதுக்கொன்றைத் தாரான் வளந்தரும் அன்றே.

  • 17. தானும் அழிந்து தனமும் அழிந்து
    ஊனும் அழிந்து உயிரும் அழிந்துடன்
    வானும் அழிந்து மனமும் அழிந்தபின்
    நானும் அழிந்தமை நானறி யேனே.
  • 18. நிற்றல் இருத்தல் கிடத்தல் நடைஓடல்
    பெற்றுஅக் காலும் திருவருள் பேராமல்
    சற்றியல் ஞானம்தந்து ஆனந்தம் தங்கவே
    உற்ற பிறப்பற்று ஒளிர்ஞான நிட்டையே.
  • 19. இருளும் வெளியும் இரண்டையும் மாற்றிப்
    பொருளிற் பொருளாய்ப் பொருந்தஉள் ளாகி
    அருளால் அழிந்திடும் அத்தன் அடிக்கே
    உருளாத கல்மனம் உற்றுநின் றேனே.
  • 2. ஆலிங் கனம்செய்து அகம்சுடச் சூலத்துச்
    சாலிங் கமைத்துத் தலைமை தவிர்த்தனர்
    கோலிங் கமைந்தபின் கூபப் பறவைகள்
    மாலிங்கு வைத்தது முன்பின் வழியே.
  • 20. ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் பராபரம்
    ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் சிவகதி
    ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் உணர்வினை
    ஒன்றிநின் றேபல ஊழிகண் டேனே.
  • 3. நின்றார் இருந்தார் கிடந்தார் எனல்இல்லாச்
    சென்றார்தம் சித்தமே மோன சமாதியாம்
    மன்றேயும் அங்கே மறைபொருள் ஒன்றுண்டு
    சென்றாங் கணைந்தவர் சேர்கின்ற வாறே.
  • 4. காட்டும் குறியும் கடந்தஅக் காரணம்
    ஏட்டின் புறத்தில் எழுதிவைத் தென்பயன்
    கூட்டும் குருநந்தி கூட்டிடி னல்லதை
    யாட்டின் கழுத்தில் அதர்கிடந் தற்றே.
  • 5. மறப்பது வாய்நின்ற மாயநன் நாடன்
    பிறப்பினை நீக்கிய பேரரு ளாளன்
    சிறப்புடை யான்திரு மங்கையும் தானும்
    உறக்கமில் போகத்(து) உறங்கிடுந் தானே.
  • 6. துரியங்கள் மூன்றும் கடந்தொளிர் சோதி
    அரிய துரியம் அதன்மீது மூன்றாய்
    விரிவு குவிவு விழுங்கி உமிழ்ந்தே
    உரைஇல் அனுபூ திகத்தில்உள் ளானே.
  • 7. உருவிலி ஊன்இலி ஊனம்ஒன் றில்லி
    திருவிலி தீதிலி தேவர்க்கும் தேவன்
    பொருவிலி பூதப் படையுடை யாளி
    மருவிலி வந்தென் மனம்புகுந் தானே.
  • 8. கண்டறி வார் இல்லைக் கயத்தின் நந்தியை
    எண்டிசை யோரும் `இறைவன்`என் றேத்துவர்
    அண்டங் கடந்த அளவிலா ஆனந்தம்
    தொண்டர் முகந்த துறைஅறி யோமே.
  • 9. தற்பர மல்லன் சதாசிவன் றானல்லன்
    நிட்கள மல்லன் சகள நிலையல்லன்
    அற்புத மாகி அனுபவக் காமம்போல்
    கற்பனை யின்றிக் கலந்துநின் றானே.