
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 25. மோன சமாதி
பதிகங்கள்

கண்டறி வார் இல்லைக் கயத்தின் நந்தியை
எண்டிசை யோரும் `இறைவன்`என் றேத்துவர்
அண்டங் கடந்த அளவிலா ஆனந்தம்
தொண்டர் முகந்த துறைஅறி யோமே.
English Meaning:
Bliss of Devotees is Beyond DescriptionNone have seen Him and known Him,
He, the Nandi, within the body, is;
All, in direction eight,
Praise Him as Lord;
The unending bliss of His devotees many;
Surpasses universes vast;
—How much they enjoyed Him, little do we know!
Tamil Meaning:
சிவபெருமானை அறிஞர் பலரும் `முதற் கடவுள்` என்று உணர்ந்து போற்றுகின்றனர். ஆயினும் அவன் அவரவர் உடலிற் குள்ளேயிருந்து அருள் புரிதலைப் பலர் அறிந்திலர், (புறத்திலேதான் வைத்துப் போற்றுகின்றனர் என்றபடி) ஆகவே, அதனை அறிந்த ஒரு சிலரே அவனுடைய மெய்த்தொண்டர் ஆகின்றனர். அவர்கள் உலகங்களைக் கடந்து ``கரையிலாக் கருணை மாகடலாயும்``3 அதனானே கரையிலா இன்ப மாகடலாயும் உள்ள சிவனிடத்தில் அந்த ஆனந்தத்தைத் தம்மால் ஆமளவும் முகந்து உண்கின்ற துறையை நாமெல்லாம் அறியாதவர்களாகவே இருக்கின்றோம்.Special Remark:
``நந்தியை`` என்பது முதலாகத் தொடங்கி, `காயத்தில் கண்டறிவார் இல்லை`` என மாற்றி; அதனை இரண்டாம் அடியின் இறுதியில் கூட்டியுரைக்க.காயம் - தூய உடம்பு. அதன் உள்ளிடமாகச் சொல்லப்படுவது இருதயம். அதனைப் பூசாத்தானமாகக் கொண்டு செய்யும் அகப் பூசையே சிறப்புடைப் பூசையாகும். இஃது `அந்தரி யாகம்` எனப்படும். ``அந்தரியா கந்தன்னை முத்தி சாதனமாய் அறைந்திடுவர்; அதுதானும் ஆன்ம சுத்தி யாகும்``l என்றது சிவஞான சித்தி. இது கிரியா பூசை.
ஞான நிலையில், `சிவரூபம், சிவதரிசனம், சிவயோகம்` என்னும் முறையில் அறிவுக்கறிவாய் அறிவினுள்ளே வைத்துச் சிவன் உணர்ந்து வழிபடப்படுவான். அது ஞான பூசை. இவை ஒன்றின் ஒன்று மேம்பட்டன. இந்த மூவகை நிலையும், `காயத்தின் உள்` என்பதாகக் கொள்ளப்படுதலின், இவற்றுட் செல்லாது புறத்தில் மட்டும் வைத்து வழிபடுவாரை நாயனார், `நந்தியைக் காயத்தின் உள்ளே கண்டறிவார் இல்லை` என்றார். காயத்தின் உள்ளே என்பதில் சாரியை நிற்க, உருபு மறைந்தது.
``எந்தையே ஈசா, உடல்இடம் கொண்டாய்;
யான்இதற் கிலன் ஒர்கைம் மாறே``*
``நிலாவாத புலால் உடம்பே புகுந்து நின்ற
கற்பகமே, யான் உன்னை விடுவே னல்லேன்``*
என்றாற்போல வரும் திருமொழிகளும் இவற்றையே குறிக்குமாற்றை ஓர்ந்துணர்ந்துகொள்க. இனி இவற்றிற்கெல்லாம் இவ்வுண்மைப் பொருளைக் கொள்ளாது, தூல உடம்பில் தரிக்கப்படும் சின்னங்களையே இவை குறிப்பனவாகக் கொண்டமை வாரும் உளர்.
``அண்டம் கடந்த பொருள்
அளவில்லதோர் ஆனந்த வெள்ளப்பொருள்``8
``... ... பேரா, ஒழியாப், பிரிவில்லா,
மறவா நினையா, அளவிலா,
மாளா இன்ப மாகடலே``9
என்னும் திருமொழிகளை இதன் மூன்றாம் அடியோடு ஒப்பிட்டு உணர்க. நுகரும் பகுதியை முகக்கும் துறையாக உருவகித்தவர். முழு நிலையையும் கடலாக உருவகம் செய்யாமையால் இஃது ஏகதேச உருவகம்.
இதனால், சிவனை அகத்தில் வழிபடுதலே மோன சமாதியைப் பயத்தல் வலியுறுத்தி உணர்த்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage