ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 25. மோன சமாதி

பதிகங்கள்

Photo

ஏழு வளைகடல் எட்டுக் குலவரை
ஆழும் விசும்பினில் அங்கி மழை வளி
தாழும் இருநிலத் தன்மை யதுகண்டு
வாழ நினைக்கில் அஃது ஆலயம் ஆமே.

English Meaning:
Reach the Holy Temple of Sahasrara

Seven the circling Seas, eight the Mountain ranges
In the depths of Space is Fire, Rain and Wind
And the Land expansive;
Visioning it, if you dwell in it
That verily a Holy Temple is.
Tamil Meaning:
புற உலகத்தை நோக்குமிடத்து நிலமும், வானமும் ஆகிய இரண்டிடங்களில் நிலத்தில் அதனைச் சூழ்ந்துள்ள ஏழு கடல்களும், நிலத்தைத் தாங்குகின்ற எட்டு உயர் மலைகளுமாகியும், வானத்தில் நெருப்பு மயமாய் உள்ள ஞாயிறும், பிற மீன்களும், மேகமும், காற்றும் ஆகியும் வியப்பூட்டுவதாய் என்றும் அழியாது நிலைத்திருப்பது போலக் காணப்படுகின்றது. இப்படியிருத்தலைக் கண்டு இந்த மண்ணுலகத்தைப் பொருளாகக் கருதி இல்லை நீடு வாழ நினைத்தால், உண்மையில் இதன் தன்மையோ, இவ்விரிவுகள் எல்லாம் ஒன்றும் இன்றி அடங்கி ஒடுங்கிப் போவதாய் உள்ளது.
Special Remark:
`ஆகவே, அறிவுடையோர் இதில் வாழ நினையாது, நிலைத்த வேறொரு நிலையில் வாழவே முயல்வர்` என்பது குறிப் பெச்சம். நிலைத்த நிலை, வீட்டு நிலை தாழ்தல் - தங்குதல். அது, பகுதிப் பொருள் விகுதி. லயம் - ஒடுக்கம். ஆலயம் - ஒடுக்கத்தை அடைவது.
இதனால், மோன சமாதிக்கு வாயிலாக உலகத்தின் நிலையாமை உணர்த்தப்பட்டது.