ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. ஆயத்துள்நின்ற அருசம யங்களும்
    காயத்துள் நின்ற கடவுளைக் காண்கில
    மாயக் குழியில் விழுவ மனைமக்கட்
    பாசத்துள் உற்றுப் பதைக்கின்ற வாறே.
  • 10. மயங்குகின் றாரும் மதிதெளிந் தாரை
    முயங்கி இருவினை மூழை முகப்பா
    இயங்கப் பெறுவரேல் ஈறது காட்டில்
    பயங்கெட் டவர்க்கோர் பரநெறி ஆமே.
  • 11. சேயன் அணியன் பிணிஇலன் பேர்நந்தி
    தூயன் துளக்கற நோக்கவல் லார்கட்கு
    மாயன் மயக்கிய மானுட ராம்அவர்
    காயம் விளைக்கும் கருத்தறி யார்களே.
  • 12. வழியிரண் டுக்கும்ஓர் வித்தது வான
    வழியது பார்மிசை வாழ்தல் உறுதல்
    சுழியறி வாளன்றன் சொல்வழி முன்னின்
    றழிவறி வார்நெறி நாடகில் லாரே.
  • 13. மாதவர் எல்லாம்மா தேவன் பிரான்என்பர்
    நாதம தாக அறியப் படும்நந்தி
    பேதம்செய் யாதே பிரான்என்று கைதொழில்
    ஆதியும் அந்நெறி ஆகிநின் றானே.
  • 14. அரநெறி அப்பனை ஆதிப் பிரானை
    உரநெறி யாகி உளம்புகுந் தானை
    பரநெறி தேடிய பத்தர்கள் சித்தம்
    பரனறி யாவிடிற் பல்வகைத் தூரமே.
  • 15. பரிசறி வானவன் பண்பன் பகலோன்
    பெரிசறி வானவர் பேற்றில் திகழும்
    துரிசற நீநினை தூய்மணி வண்ணன்
    அரிதவன் வைத்த அறநெறி தானே.
  • 16. ஆன சமயம் அது இதுநன் றெனும்
    மான மனிதர் மயக்க மதுவொழி
    கானங் கடந்த கடவுளை நாடுமின்
    ஊனங் கடந்த உருவது வாமே.
  • 17. அந்நெறி நாடி அமரர் முனிவரும்
    சென்னெறி கண்டார் சிவனெனப் பெற்றார் பின்
    முன்னெறி நாடி முதல்வன் அருளிலார்
    செந்நெறி செல்லார் திகைக்கின்ற வாறே.
  • 18. உறுமா றறிவதும் உள்நின்ற சோதி
    பெறுமா றறியிற் பிணக்கொன்றும் இல்லை
    அறுமா றதுவான அங்கியுள் ஆங்கே
    இறுமா றறிகிலர் ஏழைகள் தாமே.
  • 19. வழிநடக் கும்பரி சொன்றுண்டு வையம்
    கழிநடக் குண்டவர் கற்பனை கேட்பர்
    சுழிநடக் குந்துய ரம்மதி நீக்கிப்
    பழிநடப் பார்க்குப் பரவலு மாமே.
  • 2. உள்ளத்து ளேதான் உகந்தெங்கும் நின்றவன்
    வள்ளற் றலைவன் மலருறை மாதவன்
    பொள்ளற் குரம்பைப் புகுந்து புறப்படும்
    கள்ளத் தலைவன் கருத்தறி யார்களே.
  • 20. வழிசென்ற மாதவம் வைக்கின்ற போது
    பழிசெல்லும் வல்வினைப் பற்றறுத் தாங்கே
    அழிசெல்லும் வல்வினை ஆர்திறம் விட்டிட்
    டுழிசெல்லில் உம்பர் தலைவன் முன்ஆமே.
  • 3. உள்ளத்தும் உள்ளன் புறத்துளன் என்பவர்க்
    குள்ளத்தும் உள்ளன் புறத்துளன் எம்மிறை
    உள்ளத்தும் இல்லை புறத்தில்லை என்பவர்க்
    குள்ளத்தும் இல்லை புறத்தில்லை தானே.
  • 4. ஆறு சமயமும் கண்டவர் கண்டிலர்
    ஆறு சமயப் பொருளும் அவனலன்
    தேறுமின் தேறித் தெளிமின் தெளிந்தபின்
    மாறுதல் இன்றி மனைபுக லாமே.
  • 5. சிவமல்ல தில்லை இறையே சிவமாம்
    தவமல்ல தில்லை தலைப்படு வார்க்கிங்
    கவமல்ல தில்லை அறுசம யங்கள்
    தவமல்ல நந்திதாள் சார்ந்துய்யும் நீரே.
  • 6. அண்ணலை நாடிய ஆறு சமயரும்
    விண்ணவ ராக மிகவும் விரும்பியே
    முண்ணின் றழியும் முயற்றில ராதலின்
    மண்ணின் றொழியும் வகைஅறி யார்களே.
  • 7. சிவகதி யேகதி மற்றுள்ள எல்லாம்
    பவகதி பாசப் பிறவிஒன் றுண்டு
    தவகதி தன்னொடு நேரொன்று தோன்றில்
    அவகதி மூவரும் அவ்வகை ஆமே.
  • 8. நூறு சமயம் உளவாம் நுவலுங்கால்
    ஆறு சமயம்அவ் ஆறுட் படுவன
    கூறு சமயங்கள் கொண்ட நெறிநில்லா
    ஈறு பரநெறி இல்லா நெறியன்றே.
  • 9. கத்துங் கழுதைகள் போலுங் கலதிகள்
    சுத்த சிவன்எங்கும் தோய்வற்று நிற்கின்றான்
    குற்றந் தெரியார் குணங்கொண்டு கோதாட்டார்
    பித்தேறி நாளும் பிறந்திறப் பார்களே.