ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 17. புறச்சமய தூடணம்

பதிகங்கள்

Photo

அரநெறி அப்பனை ஆதிப் பிரானை
உரநெறி யாகி உளம்புகுந் தானை
பரநெறி தேடிய பத்தர்கள் சித்தம்
பரனறி யாவிடிற் பல்வகைத் தூரமே.

English Meaning:
God is Within You; and Yet Far Away

He is Hara, Divine Father, Primal Lord
As implacable Truth He entered the heart;
But if hearts of devotees sought alien paths
They know Him not;
Then is He far, far away.
Tamil Meaning:
`உலகியலின் மேம்பட்ட வீட்டு நெறியாது` என்று ஆராய்கின்ற அன்பர்களது உள்ளம், சிவ நெறித் தந்தையும், முதற் கடவுளும், ஞான நெறியாய் ஞானிகளது உள்ளத்து விளங்கு பவனும் ஆகிய சிவனை அறியா தொழியுமாயின், அவ்வுள்ளங்கள் பலவகையாலும் வீட்டு நெறிக்கு மிகச் சேய்மைப்பட்டனவே யாகும்.
Special Remark:
``யதா சர்மவ தாகாசம் வேஷ்ட இஷ்யந்தி மானவா;I
ததாசிவ மவிக்ஞாய துக்க ஸ்யாந்தோ பவிஷ்யதி II``
என்னும் உபநிடத வாக்கியத்தையும்,
``பரசிவ னுணர்ச்சி யின்றிப் பல்லுயிர்த் தொகையும் என்றும்
விரவிய துயர்க்கீ றெய்திவீடுபே றடைது மென்றல்
உருவமில் விசும்பின்தோலை உரித்துடுப்பதற் கொப்பென்றே
பெருமறைபேசிற்றென் னின்பின்னுமோர்சான்று முண்டோ`` 1
எனவும்,
``மானிடன் விசும்பைத்தோல்போல் சுருட்டுதல் வல்லனாயின்
ஈனமில் சிவனைக் காணா திடும்பைதீர் வீடு மெய்தும்
மானமார் சுருதி கூறும் வழக்கிவை ஆத லாலே
ஆனமர் இறையைக் காணும் உபாயமேயறிதல் வேண்டும்`` 2
எனவும் இதனை மொழிபெயர்த்துக் கூறியவற்றையும் இங்குக் காண்க. உரம் - அறிவு. ``உரனென்னும் தோட்டி`` 3 என்பதும் காணத்தக்கது. ``பரன்`` என்பதை அவ்விடத்துத் தொகுக்கப்பட்ட இரண்ட னுருபை விரித்து, ``புகுந்தானை`` என்பதன்பின் கூட்டி உரைக்க.
இதனால், புறச்சமயங்கள் வீட்டுநெறி ஆகாமை கூறப்பட்டது.