ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 17. புறச்சமய தூடணம்

பதிகங்கள்

Photo

மாதவர் எல்லாம்மா தேவன் பிரான்என்பர்
நாதம தாக அறியப் படும்நந்தி
பேதம்செய் யாதே பிரான்என்று கைதொழில்
ஆதியும் அந்நெறி ஆகிநின் றானே.

English Meaning:
Lord and Nandi are One

All the holy ones hail Him as Great God; the Supreme Lord,
He that is Nada and bears the name Nandi;
You too shall make no distinction,
But in prayer lift your hands to Him as Being Supreme;
And the Primal One shall as such reveal Himself.
Tamil Meaning:
பெரிய தவத்தையுடையோர் யாவரும், `மகா தேவன்` என்பதைத் தன் பெயராக உடைய சிவனே முதல்வன் என ஒருபடித்தாகக் கூறுவர். அதனால், அவர் கூறிய வாறே அறியப்படுபவ னாகிய சிவனைச் சிறிதும் வேறுபடாத அக்கருத்துடன், `முதல்வனே` என்று அழைத்துக் கும்பிட்டால், அந்தச் சிவனும் நன்னெறியாய் நின்று நலம் தருவான்.
Special Remark:
நாதம் - தலைமை. பிரான், அண்மை விளி பயனிலைப் பெயராகக் கொண்டுரைப்பின். அது முன்னரே கூறப்பட்டதாதல் அறிக. ``நந்தியை`` என்னும் இரண்டனுருபு தொகுத்தல் பெற்றது. ``அந்நெறி`` என்பதே, `அம் நெறி` எனப் பிரித்துப் பொருள் கூறுக. அம் - அழகு; நன்று. `அந்நெறி` எனச் சுட்டாகவே கொள்ளின், `தானே பிரானாம் நெறி` என உரைக்க.
இதனால், `சிவ நெறி யல்லாதன பலவும் அறியாதார் கொள்ளும் மயக்க நெறியே` என்பது கூறப்பட்டது.