ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. மதிவட்ட மாக வரையைந்தும் நாடி
    இதுவிட்டிங் கீரா றமர்ந்த அதனால்
    பதிவட்டத் துள்நின்று பாலிக்கு மாறும்
    அதுவிட்டுப் போமாறும் ஆயலுற் றேனே. 
  • 10. முடிந்த தறியார் முயல்கின்ற மூர்க்கர்
    இடிஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டு
    கடிந்தனல் மூளக் கதுவவல் லார்க்கு
    நடந்திடும் பாரினில் நண்ணலு மாமே. 
  • 11. நண்ணும் சிறுவிரல் நாணாக மூன்றுக்கும்
    பின்னிய மார்பிடைப் பேராமல் ஒத்திடும்
    சென்னியில் மூன்றுக்குஞ் சேரவே நின்றிடும்
    உன்னி உணர்ந்திடும் ஓவியந் தானே. 
  • 12. ஓவிய மான உணர்வை அறிமின்கள்
    பாவிகள் இத்தின் பயனறி வாரில்லை;
    தீவினை யாம்உடல் மண்டலம் மூன்றுக்கும்
    பூவில் இருந்திடும் புண்ணியத் தண்டே. 
  • 13. தண்டுடன் ஓடித் தலைப்பெய்த யோகிக்கு
    மண்டல மூன்றும் மகிழ்ந்துடல் ஒத்திடும்;
    கண்டவர் கண்டனர் காணார் வினைப்பயன்
    பிண்டம் பிரியப் பிணங்குகின் றாரே. 
  • 14. பிணங்கி அழிந்திடும் பேறது கேள்நீ
    அணங்குடன் ஆதித்தன் ஆறு விரியின்
    வணங்குட னேவந்த வாழ்வு குலைந்து
    சுணங்கனுக் காகச் சுழல்கின்ற வாறே. 
  • 15. சுழல்கின்ற ஆறின் துணைமலர் காணான்
    தழலிடைப் புக்கிடுந் தன்னு ளிலாமல்
    கழல்கண்டு போம்வழி காணவல் லார்க்குக்
    குழல்வழி நின்றிடுங் கூத்தனு மாமே. 
  • 16. கூத்தன் குறியிற் குணம்பல கண்டவர்
    சாத்திரந் தன்னைத் தலைப்பெய்து நிற்பர்கள்
    பார்த்திருந் துள்ளே அனுபோகம் நோக்கிடில்
    ஆத்தனு மாகி அமர்ந்திடும் ஒன்றே. 
  • 17. ஒன்றில் வளர்ச்சி உலப்பிலி கேளினி
    நன்றென்று மூன்றுக்கு நாளது சென்றிடும்
    சென்றிடும் முப்பதுஞ் சேர இருந்திடில்
    குன்றிடைப் பொன்திகழ் கூத்தனு மாமே. 
  • 18. கூத்தவன் ஒன்றிடுங் கூர்மை அறிந்தங்கே
    ஏத்துவர் பத்தினில் எண்டிசை தோன்றிடப்
    பார்த்து மகிழ்ந்து பதுமரை நோக்கிடிற்
    சாற்றிடு நூறு தலைப்பெய்ய லாமே. 
  • 19. சாற்றிடு நூறு தலைப்பெய்து நின்றவர்
    காத்துடல் ஆயிரங் கட்டுறக் காண்பர்கள்
    சேர்த்துடல் ஆயிரஞ் சேர இருந்தவர்
    மூத்துடன் கோடி யுகமது வாமே. 
  • 2. உற்றறி வைந்தும் உணர்ந்தறி வாறேழும்
    கற்றறி வெட்டும் கலந்தறி வொன்பதும்
    பற்றிய பத்தும் பலவகை நாழிகை
    அற்ற தறியா தழிகின்ற வாறே.
  • 20. உகங்கோடி கண்டும் ஒசிவற நின்று
    அகங்கோடி கண்டுள் அயலறக் காண்பர்கள்
    சிவங்கோடி விட்டுச் செறிய இருந்தங்
    குகங்கோடி கண்டங் குயருறு வாரே. 
  • 21. உயருறு வார்உல கத்தொடுங் கூடிப்
    பயனுறு வார்பலர் தாமறி யாமற்
    செயலுறு வார்சிலர் சிந்தையி லாமல்
    கயலுறு கண்ணியைக் காணகி லாரே. 
  • 22. காணகி லாதார் கழிந்தோடிப் போவர்கள்
    நாணகி லார்நயம் பேசி விடுவர்கள்
    காணகி லாதார் கழிந்த பொருளெலாம்
    காணகி லாமற் கழிகின்ற வாறே. 
  • 23. கழிகின்ற அப்பொருள் காணகி லாதார்
    கழிகின்ற அப்பொருள் காணலுமாகும்
    கழிகின்ற வுள்ளே கருத்துற நோக்கிற்
    கழியாத அப்பொருள் காணலு மாமே.
  • 24. கண்ணன் பிறப்பிலி காண்நந்தி யாய்உள்ளே
    எண்ணுந் திசையுடன் ஏகாந்த னாயிடும்
    திண்ணென் றிருக்குஞ் சிவகதி யாய்நிற்கும்
    நண்ணும் பதமிது நாடவல் லார்கட்கே. 
  • 25. நாடவல் லார்க்கு நமனில்லை கேடில்லை
    நாடவல் லார்கள் நரபதி யாய்நிற்பர்
    தேடவல் லார்கள் தெரிந்த பொருளிது
    கூடவல் லார்கட்குக் கூறலு மாமே. 
  • 26. கூறும் பொருளி தகார வுகாரங்கள்
    தேறும் பொருளிது சிந்தையுள் நின்றிடக்
    கூறும் மகாரங் குழல்வழி யோடிட
    ஆறும் அமர்ந்திடும் அண்ணலு மாமே. 
  • 27. அண்ணல் இருப்பிடம் ஆரும் அறிகிலர்
    அண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வார்களுக்
    கண்ணல் அழிவின்றி உள்ளே அமர்ந்திடும்
    அண்ணலைக் காணில் அவன்இவன் ஆகுமே. 
  • 28. அவன்இவ னாகும் பரிசறி வாரில்லை
    அவன்இவ னாகும் பரிசது கேள்நீ
    அவன்இவன் ஓசை ஒளியினுள் ஒன்றிடும்
    அவன்இவன் வட்டம தாகிநின் றானே.
  • 29. வட்டங்கள் ஏழும் மலர்ந்திடும் உம்முளே
    சிட்டன் இருப்பிடஞ் சேர அறிகிலீர்
    ஒட்டி யிருந்துள் உபாயம் உணர்ந்திடக்
    கட்டி இருப்பிடங் காணலு மாகுமே. 
  • 3. அழிகின்ற ஆண்டவை ஐயைஞ்சு மூன்று
    மொழிகின்ற முப்பத்து மூன்றென்ப தாகும்
    கழிகின்ற கால்அறு பத்திரண் டெண்ப
    தெழுகின்ற ஈரைம்ப தெண்ணல் திருந்தே. 
  • 30. காணலு மாகும் பிரமன் அரியென்று
    காணலு மாகுங் கறைக்கண்டன் ஈசனைக்
    காணலு மாகுஞ் சதாசிவ சத்தியும்
    காணலு மாகுங் கலந்துடன் வைத்ததே. 
  • 4. திருந்து தினமத் தினத்தி னொடுநின்
    றிருந்தறி நாளொன் றிரண்டிரு மூன்று
    பொருந்திய நாளொடு புக்கறிந் தோங்கி
    வருந்துத லின்றி மனைபுக லாமே. 
  • 5. மனைபுகு வீரும் மகத்திடை நாடி
    எனைஇரு பத்தஞ்சும் ஈரா றதனால்
    தனையறிந் தேறட்டுத் தற்குறி யாறு
    வினையறி யாறு விளங்கிய நாலே. 
  • 6. நாலுங் கடந்தது நால்வரும் நால்ஐந்தும்
    பாலங் கடந்தது பத்துப் பதினைந்து
    கோலங் கடந்த குணத்தாண்டு மூவிரண்
    டாலங் கடந்ததொன் றாரறி வாரே. 
  • 7. ஆறும் இருபதுக் கையைஞ்சு மூன்றுக்குந்
    தேறு மிரண்டு மிருபத்தொ டாறிவை
    கூறு மதியொன் றினுக்கிரு பத்தேழு
    வேறு பதிஅங்கண் நாள்விதித் தானே.
  • 8. விதித்த இருபத்தெட் டொடுமூன் றறையாகத்
    தொகுத்தறி முப்பத்து மூன்று தொகுமின்
    பதித்தறி பத்தெட்டும் பாரா திகள்நால்
    உதித்தறி மூன்றிரண் டொன்றின் முறையே. 
  • 9. முறைமுறை யாய்ந்து முயன்றில ராகில்
    இறையிறை யார்க்கும் இருக்க அரிது
    மறையது காரணம் மற்றொன்று மில்லை
    பறையறை யாது பணிந்து முடியே.