ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. மாயை இரண்டு மறைக்க மறைவுறும்
    காயம்ஓ ரைந்தும் கழியத்தா மாகியே
    தூய பரஞ்சுடர் தோன்றச் சொரூபத்துள்
    ஆயவர் ஞானாதி மோனத்த ராவரே.
  • 10. மருவிற் பிரவறி யான்எங்கள் நந்தி
    உருவம் நினைக்கின்நின் றுள்ளே உருக்கும்
    கருவிற் கலந்துள்ளம் காணவல் லார்க்(கு) இங்(கு)
    அருவினை சோரும் அழிவார் அகத்தே.
  • 11. தலைப்பட லாம்எங்கள் தத்துவன் றன்னை
    அலைப்படு பாசம் அறுத்தறுத் திட்டு
    நிலைப்பட நாடி நினைப்பற உள்கின்
    தலைப்பட லாகும் தருமமுந் தானே.
  • 12. நினைக்கின் நினைக்கும் நினைப்பவர் தம்மைச்
    சுனைக்குள் விளைமலர்ச் சோதியி னானைத்
    தினைப்பிளந் தன்ன சிறுமைய ரேனும்
    கனத்த மனத்தடைந் தார்உயர்ந் தாரே.
  • 13. தலைப்படுங் காலத்துத் தத்துவன் றன்னை
    விலக்குறின் `மேலே விதி`என்று கொள்க
    அனைத்துல காய்நின்ற ஆதிப் பிரானை
    நினைப்புறு வார்பத்தி நேடிக்கொள் வாரே.
  • 14. நகழ்வொழிந் தார்அவர் நாதனை உள்கி
    நிகழ்வொழிந் தார்எம் பிரானொடுங் கூடித்
    திகழ்வொழிந் தார்தங்கள் சிந்தியனுள்ளே
    புகழ்வழி காட்டிப் புகுந்துநின் றானே.
  • 15. வந்த மரகத மாணிக்க ரேகைபோய்ச்
    சந்தித் திடும்மொழி சற்குரு சன்மார்க்கம்
    இந்த ரேகை இரேகை இலாடத்தின் மூலத்தே
    சுந்தரச் சோதியுட் சோதியும் ஆமே.
  • 16. உண்ணும் வாயும் உடலும் உயிருமாய்க்
    கண்ணும்மா யோகக் கடவுள் இருப்பது
    மண்ணும் நீர் அனல் காலொடு வானும் மாய்
    விண்ணும்பின் னின்றி வெளியானோர் மேனியே.
  • 17. பரசு பதியென்று பார்முழு தெல்லாம்
    பரசிவன் ஆணை நடக்கும்மப் பாதியால்
    பெரிய பதிசெய்துபின்ஆம் அடியார்க்(கு)
    உரிய பதியும்பார் ஆக்கிநின் றானே.
  • 18. அம்பர நாதன் அகலிட நீள்பொழில்
    தன்பர மல்லது தாம் `அறியோம்` என்பர்
    உம்பருள் வானவர் தானவர் கண்டிலர்
    எம்பெரு மான்அருள் பெற்றிருந் தாரே.
  • 19. கோவணங் கும்படி கோவண மாகிப்பின்
    நாவணங் கும்படி நந்தி அருள்செய்தான்
    தேவணங் கோம்இனிச் சித்தம் தெளிந்தனம்
    போய்வணங் கும்பொரு ளாயிருந் தோமே.
  • 2. ஆறொடு முப்பதும் அங்கே அடங்கிடல்
    கூறக் குருபரன் கும்பிடு தந்திடும்
    வேறே சிவபதம் மேலா அளித்திடும்
    பேறாக ஆனந்தம் பேணும் பெருகியே.
  • 3. துரியங்கள் மூன்றும் கடந்தொளிர் சோதி
    அரிய பரசிவம் யாவையு மாகி
    விரிவு குவிவற விட்ட நிலத்தே
    பெரிய குருபதம் பேசஒண் ணாதே.
  • 4. ஆயன நந்தி அடிக்கென் தலைபெற்றேன்
    வாயன நந்தியை வாழ்த்தஎன் வாய்பெற்றேன்
    காயன நந்தியைக் காணஎன் கண்பெற்றேன்
    சேயன நந்திக்கென் சிந்தைபெற் றேனே.
  • 5. கருடன் உருவம் கருதும் அளவில்
    பருவிடந் தீர்த்து பயங்கேடு மாபோல்
    குருவின் உருவம் குறித்த அப்போதே
    திரிமலம் தீர்ந்து சிவன்அவன் ஆமே.
  • 6. தோன்ற அறிதலும் தோன்றல்தோன் றாமையும்
    மான்ற அறிவும் மறிநன வாதிகள்
    மூன்றவை நீங்கும் துரியங்கள் மூன்(று)அற
    ஊன்றிய நந்தி உயர்மோனத் தானே.
  • 7. சந்திர பூமிக்குள் தன்புரு வத்திடைக்
    கந்த மலரில் இரண்டிதழ்க் கன்னியும்
    பந்தம் அறுத்த பளிங்கின் உருவினர்
    பந்தம் அறுத்த பரம்குரு பற்று.
  • 8. மனம்புகு தான்உல கேழும் மகிழ
    நிலம்புகுந் தான்நெடு வான்நிலம் தாங்க
    சினம்புகுந் தான்திசை எட்டும் நடுங்க
    வனம்புகுந் தான்ஊர் வடக்கென்ப தாமே
  • 9. தான்ஆன வண்ணம்ஐங் கோசமும் சார்தரும்
    தான்ஆம் பறவை வனம்எனத் தக்கன
    தான்ஆன சோடச மார்க்கம்தான் நின்றிடில்
    தான்ஆம் தசாங்கமும் வேறுள்ள தாமே.