ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 2. ஞானகுரு தரிசனம்

பதிகங்கள்

Photo

ஆயன நந்தி அடிக்கென் தலைபெற்றேன்
வாயன நந்தியை வாழ்த்தஎன் வாய்பெற்றேன்
காயன நந்தியைக் காணஎன் கண்பெற்றேன்
சேயன நந்திக்கென் சிந்தைபெற் றேனே.

English Meaning:
At the Thought of Guru`s Form Impurities Vanish

At the thought of Garuda`s form
The serpent`s poison leaves
Its terrors lose;
Like it,
At the thought of Guru`s form
The triple Malas leave instant;
The Jiva then Siva becomes.
Tamil Meaning:
என் ஞானகுரு நந்தி பெருமான்; அவர் தாயைப் போலும் கருணையுடையவர்; உயிர்க்கு உறுதி பயக்கும் சொல்லை யுடையவர்; கட்புலனாகின்ற திருமேனியை உடையவர். எனினும் பாவிகட்கு எட்டாதவர். யான் தலையைப் பெற்றது அவரது திருவடிகளில் படும்படி வணங்குதற்காகவே; மற்றும் அவற்றைச் சூட்டுதற்காகவுமாம். நான் வாய்பெற்றது அவரை வாழ்த்துதற்காகவே. நான் கண்பெற்றது அவரைத் தரிசித்தற்காகவே, நான் மனத்தைப் பெற்றது அவரை நினைத்தற்காகவே.
Special Remark:
`ஞானத்தை விரும்புவோர் பலரும் எந்த ஞான குருவையேனும் அடைந்து, அவருக்கு ஆட்படுதலையே தங்கள் பிறவிப் பயனாக உணர்தல் வேண்டும்; இல்லையேல், ஞானம் கிடையாது; கிடைப்பினும் நிலைத்து நின்று பயன் தாராது` என்பதாம். ஆயன் - ஆய் தாய் போன்றவன். வாய் - வாய்மை. `காயத்தன்` என்பதில் அத்துச் சாரியை தொகுத்தலாயிற்று. `அந்நந்தி` என்பது, நான்கடிகளிலும் சந்தி நகர ஒற்று தொகுக்கப்பட்டு நின்றது. ``அடிக்கு, நந்திக்கு`` என்னும் நான்கன் உருபுகள் `அடியை வணங்குதற்கு, நந்தியைச் சிந்தித்தற்கு` என வினை பற்றி நின்றன. `பூவினைச் சென்றான், கடைக்குச் சென்றான்` என்பனபோல.
இதனால், ஞான குரு தரிசனமே மானுடப் பிறப்பின் பயனாதல் கூறப்பட்டது.