ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 2. ஞானகுரு தரிசனம்

பதிகங்கள்

Photo

மாயை இரண்டு மறைக்க மறைவுறும்
காயம்ஓ ரைந்தும் கழியத்தா மாகியே
தூய பரஞ்சுடர் தோன்றச் சொரூபத்துள்
ஆயவர் ஞானாதி மோனத்த ராவரே.

English Meaning:
When the Holy Guru Appears

When the Tattvas six and thirty subdued are,
Then shall the Holy Guru appear
For you to adore;
Siva-State too will on you be conferred;
And then will well up the Bliss Ineffable.
Tamil Meaning:
`அசுத்த மாயை, பிரகிருதி மாயை` என்னும் இரு மாயைகள் தம்முள் ஒடுக்க ஒடுங்குகின்ற ஐந்து உடல்களையும் அவற்றது இயல்பை உள்ளவாறு உணர்ந்து, `அவை நாம் அல்ல` என்று கழிக்கக் கழிதலால், மூன்னர்த் தாம் சடமாகிய அவையாகாது, சித்தாகி நின்று, அங்ஙனம் நின்ற அந்நிலையில், இயற்கையிலே அசுத்தமாய் நின்ற பாசஞானமும், செயற்கையால் அசுத்தமாகிய பசு ஞானமும் போலாது, இயல்பாகவே தூய்தாகிய பதிஞானம், தோன்ற, அதனானே அந்த ஞானத்திற்கு முதலாய் உள்ள சிவத்தை அறிந்து, அதனுள் அடங்கியிருப்பவர்` மோனிகட்கு மேலாகிய மோனிகளாவார்.
Special Remark:
`அத்தகையோரே ஞானக் குரவர்` என்பது குறிப்பெச்சம். சுத்தமாயை சகலர்க்கு உடம்பாய் வருதல் இன்மையானும், இங்குக் கூறுவது சகலரையே ஆகலானும் ``மாயை இரண்டு`` என்பதற்கு, `சுத்த மாயை, அசுத்த மாயை` என உரைத்தல் கூடாமையறிக. சிவசத்தியால் செய்யும் மாயைகளை அவையே செய்வனபோலக் கூறினார் ஐந்து உடம்புகள் எட்டாம் தந்திரத் தொடக்கத்தில் கூறப்பட்டன. ஞான அதிமோனர் - ஞான முதிர்ச்சியால் முற்றிய மௌன நிலையை அடைந்தவர்.
ஞானகுரு தரிசனச் சிறப்பைக் கூறுதற்கு முதற்கண் ஞானகுருவின் இயல்பு விளக்கப்பட்டது.