ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 2. ஞானகுரு தரிசனம்

பதிகங்கள்

Photo

கோவணங் கும்படி கோவண மாகிப்பின்
நாவணங் கும்படி நந்தி அருள்செய்தான்
தேவணங் கோம்இனிச் சித்தம் தெளிந்தனம்
போய்வணங் கும்பொரு ளாயிருந் தோமே.

English Meaning:
Grace Gives Clear Vision

He made Jivas renounce
That they the Lord adore;
He made them praise Him in words meek;
That He the Nandi His Grace confers;
No more the other Gods we adore;
Our vision is clear now;
We became the Object
For other Jivas to seek and worship.
Tamil Meaning:
எங்கள் ஞான குருவாகிய நந்தி பெருமான் எங்களுடைய நாங்கள் எங்களையே புகழ்ந்து கொள்ளும் இயல்புடையனவாய் இருந்த நிலையை மாற்றித் தமக்கு வணக்கங் கூறுவன ஆகும்படி அருள்புரிந்தார். அதனால், பின்பு எங்கள் அறிவுகள் தெளிவுடையன ஆகப் பெற்றோம். ஆகி, தேவர்கோவும் மக்கட் கோக்கள் பலரும் வணங்கும்படி `கோவணமும் மிகையே` என்னும் மனப்பான்மையுடன் துறவுக் கோலத்தை உடையர் ஆயினோம். யாவரும் பல அரிய சாதனங்களின் வழியே சென்று அடையப்படும் பொருளாகிய சிவமேயாய் இருக்கின்றோம். ஆகவே இனிப் `பிறிதொரு தெய்வத்தை வணங்குதல்` என்பது எங்கள்பால் நிகழாது.
Special Remark:
`நந்தி, நா வணங்கும்படி அருள் செய்தான்; பின் சித்தம் தெளிந்தனம்; கோ வணங்கும்படி கோவணம் ஆகிப் போய் வணங்கும் பொருளாகி யிருந்தோம்; இனித்தே வணங்கோம்` என இயைத்துக் கொள்க.
நா வணங்குதல் கூறவே, ஏனைத் தலையும், உள்ளமும் வணங்குதலும் உடன் கொள்ளப்படும். ஈற்றடி ஆசிடை எதுகை.
இதனால் ஞான குரு தரிசனத்தால் விளையும் பயன் தம் அனுபவ்தில் வைத்துக் காட்டி முடிக்கப்பட்டது.