ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 2. ஞானகுரு தரிசனம்

பதிகங்கள்

Photo

துரியங்கள் மூன்றும் கடந்தொளிர் சோதி
அரிய பரசிவம் யாவையு மாகி
விரிவு குவிவற விட்ட நிலத்தே
பெரிய குருபதம் பேசஒண் ணாதே.

English Meaning:
What These Body Organs are for

To bear Nandi`s Feet, I was gifted this head;
To praise Nandi Great, I was gifted this mouth;
To vision Nandi Eternal, I was gifted these eyes;
To think of Nandi afar, I was gifted this mind.
Tamil Meaning:
தம்மை அடைந்தவரை, முத்துரியங்கட்கும் அப்பாற்பட்டு ஒளிரும் பேரொளிப் பிழம்பாகிய, அணுகுதற்கரிய பரசிவப் பொருளேயாய், அதனைப்போலவே எங்கும் வியாபகமாய், அறிவு மாயாகாரியங்களின்மேல் படர்ந்து செல்லுதலும், அதனை விட்டு ஒன்றும் அறியாது அறியாமையுள் மூழ்கிக்கிடத்தலும் ஆகிய `சகலம், கேவலம்` என்னும் இரண்டும் அற்ற இடமாகிய சுத்த நிலையிலே தங்கும்படி கொண்டுபோய்ச் சேர்க்கின்ற பெருஞான குருவின் திருவடி தரிசனச் சிறப்பை அளவிட்டுச் சொல்ல இயலாது.
Special Remark:
முத்துரியங்களை முன் தந்திரத்தில் சொல்லப்பட்டன. `ஆகி` என்பதை, ``பரசிவம்`` என்பதனோடும் கூட்டுக. விரிவு, சகலம். குவிவு, கேவலம். ``விரிவு குவிகு அற`` என்றதனஆல், `அவை அற்ற நிலத்தே விட்ட பெரிய குரு` என்க. விடுதல் - சேர்த்தல். அதிகாரம் `தரிசனம்` ஆதலின், ``பதம்`` என்பதும், பாத தரிசனத்தையே என்க. பாதம் பயன் தருதலும் தரிசனத்தினாலே யென்பதும் உணரற்பாற்று.
இதனால், முன் மந்திரத்தில் `வேறே சிவபதம் மேலா அளித்திடும்`` எனக் கூறப்பட்ட பயனின் பெருமை உணர்த்தப்பட்டது.