
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 2. ஞானகுரு தரிசனம்
பதிகங்கள்

ஆறொடு முப்பதும் அங்கே அடங்கிடல்
கூறக் குருபரன் கும்பிடு தந்திடும்
வேறே சிவபதம் மேலா அளித்திடும்
பேறாக ஆனந்தம் பேணும் பெருகியே.
English Meaning:
Parasivam is Beyond the Three TuriyasBeyond the Turiyas Three
Is the Light Resplendent;
It is the Parasiva that pervades all;
In that Land
That knows neither contraction nor expansion
Are the Feet of Guru Holy
That, beyond speech, is.
Tamil Meaning:
உயிர்க்குச் சிவத்தைக் காட்டாது தம்மையே காட்டி நிற்கின்ற முப்பத்தாறு கருவிகளின் சேட்டைகளும் அடங்கும் முறையை மேலான குரு உபதேசம் செய்யும் பேற்றினை அக்குருவைத் தரிசித்து வணங்குவதாகிய வணக்கமே தரும். அவ்வுபதேச வாயிலாக அது மேலும் சிறப்பாகச் சிவனது திருவடியைத் தரும் பின்பு முடிநிலைப் பேறாக அவனது ஆனந்தத்தைத் தந்து, அஃது எல்லை யின்றிப் பெருகி வருமாறு பேணியும் நிற்கும்.Special Remark:
`ஆகவே, உபதேசத்திற்கு முன்னும், அதன் பின் சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடல் என்னும் நிலைகளிலும் குரு வழிபாட்டினைத் தவிரற்க` என்பது குறிப்பெச்சம்.``தன்னை யறிவித்துத் தான்தானாச் செய்தானைப்
பின்னை மறத்தல் பிழையலது - முன்னவனே
தானேதா னாச் செய்தும், தைவமென்றுந் தைவமே;
மானே தொழுகை வலி``3
என்றார் மெய்கண்ட தேவரும்.
அங்கே - அப்பொழுதே. ``அடங்கிடல்`` என்றது, அதற்குரிய வழியைக் குறித்தது. `குருபரன் கூற, அவனைக் கும்பிடுதல் தந்திடும்` என இயைக்க. கும்பிடு, முதனிலைத் தொழிற்பெயர். `தத்துவம் முப்பத்தாறனுள் மேலே உள்ள சிவதத்துவம் ஐந்தும் செலுத்துதல் அளவாய் நிற்க, ஏனை முப்பத்தொரு தத்துவங்களே சகலர்க்கு மேற்கூறிய ஐந்துடம்புகளாய் வந்து பொருந்தும்` என்க.
இதனால், ஞான குரு தரிசனம் அடைதற்கரிய பேறுகளை யெல்லாம் அளித்தல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage