ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 2. ஞானகுரு தரிசனம்

பதிகங்கள்

Photo

சந்திர பூமிக்குள் தன்புரு வத்திடைக்
கந்த மலரில் இரண்டிதழ்க் கன்னியும்
பந்தம் அறுத்த பளிங்கின் உருவினர்
பந்தம் அறுத்த பரம்குரு பற்று.

English Meaning:
Sakti is in Ajna Centre

In the Centre between the eye-brows,
Is the Sphere of the Moon;
There on the flower of petals two
Is Virgin Sakti seated;
Radiant as Crystal is Her Form;
(To vision Her)
Seek you the Guru
Who all bonds sundered.
Tamil Meaning:
புருடனது உடம்பில் சந்திர மண்டலம் எனக் குறிக்கப்படுகின்ற அந்த எல்லைக்குள்ளேயிருக்கின்ற புருவ நடுவில், நறுமணம் பொருந்திய ஈரிதழ்த் தாமரை மலரில் அருட்சத்தி, பிறிதொரு நிறத்தொடு கூடாது தூய்மையாய் உள்ள படிகம்போன்றிருக்கின்றார். உனது பாச பந்தங்களை முற்ற அறுத்த ஞான குருவை நீ அவ்விடத்திலே தியானி.
Special Remark:
`தியானித்தால் அவர் உன்னைச் சிவனாக்கி விடுவார்` என்பது குறிப்பெச்சம். ஞான பூசைக்கு ஓமத் தானம், பூசைத் தானம், தியானத் தானம் முறையே உந்தி, இதயம், புருவநடு ஆதலின், `தியானத்தைப் புருவ நடுவிலே செய்க` என்றார். புருவ நடுவே `ஆஞ்ஞை` எனப்படும். ஆஞ்ஞை, சிவனது ஆணை. அது சத்தியேயாதலை உணர்க. `இரண்டிதழ்க் கந்த மலரில்` என மாற்று. ``கன்னியும்`` என்னும் உம்மை சிறப்பு. பரம் குரு - மேலான குரு.
இதனால், கருடோகம் பாவனைபோலக் குருவைப் பாவகன் தானாகப் பாவித்தலைச் செய்யும் இடம் கூறப்பட்டது.