ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. வித்துப் பொதிவார் விதைவிட்டு நாற்றுவார்
    அற்றதம் வாழ்நாள் அறிகிலாப் பாவிகள்
    உற்ற வினைத்துயர் ஒன்றும் அறிகிலார்
    முற்றொளி ஈயல் முளிகின்ற வாறே.
  • 10. கூடவல் லார்குரு வைத்த குறிகண்டு
    நாடகில் லார் நயம் பேசித் திரிவர்கள்
    பாடகில் லார்அவன் வைத்த பரிசறிந்து
    ஆடவல் லார் அவர் பேறெது ஆமே.
  • 11. நெஞ்சு நிறைந்தங் கிருந்த நெடுஞ்சுடர்
    நஞ்செம் பிரான்என்று நாதனை நாடொறும்
    துஞ்சு மளவும் தொழுமின் தொழாவிடில்
    அஞ்சற்று விட்டதோர் ஆனையும் ஆமே.
  • 12. மிருகம் மனிதர்கள் மிக்கோர் பறவை
    ஒருவர் செய் தன்புவைத் துன்னாத தில்லை
    பருகுவர் ஓடுவர் பார்ப்பயன் கொள்வர்
    திருமரு மாதவம் சேர்ந்துணர்ந் தாரே.
  • 13. நீதி யிலோர்பெற்ற பொன்போல் இறைவனைச்
    சோதியில் ஆரும் தொடர்ந்தறி வார்இல்லை
    ஆதி அயனென் றமரர் பிரானென்று
    நாதியே வைத்தது நாடுகின் றேனே
  • 14. இருந்தேன் மலரளைந் தின்புற வண்டு
    பெருந்தேன் இழைக்கின்ற பெற்றிமை ஓரார்
    வருந்தேன் நுகராது வாய்புகு தேனை
    அருந்தேனை யாரும் அறியகி லாரே.
  • 15. கருத்தறி யாது கழிந்தன காலம்
    அருத்தியுள் ளான்அம ராபதி நாதன்
    ஒருத்தனுள் ளான்உல கத்துயிர்க் கெல்லாம்
    வருத்திநில் லாது வழுக்குகின் றாரே.
  • 16. குதித்தோடிப் போகின்ற கூற்றமும் சார்வாய்
    விதித்தன நாள்களும் வீழ்ந்து கழிந்த
    அதிர்த்திருந் தென்செய்தீர் ஆறுதி ராயின்
    கொதிக்கின்ற கூழில் துடுப்பிட லாமே.
  • 17. கரையரு காறாக் கழனி விளைந்தது
    திரையரு காமுன்னம் சேர்ந்தின்பம் எய்தும்
    வரையரு கூறிய மாதவம் நோக்கின்
    நரையுரு வாச்செல்லும் நாள்இல வாமே.
  • 18. வரவறி வானை மயங்கிருள் ஞாலத்
    திரவறி வானை எழுஞ்சுடர்ச் சோதியை
    அரவறி வார்முன் ஒருதெய்வம் என்று
    விரவறி யாமலே மேல்வைத்த வாறே.வரவறி
  • 2. போது சடக்கெனப் போகின் றதுகண்டும்
    வாதுசெய் தென்னோ மனிதர் பெறுவது
    நீதியு ளேநின்று நின்மலன் தாள்பணிந்து
    ஆதியை அன்பில் அறியகில் லார்களே.
  • 3. கடன்கொண்டு நெற்குற்றுக் கையரை ஊட்டி
    உடம்பினை யோம்பி உயிராய்த் திரிவார்
    தடங்கொண்ட சாரல் தழல்முரு டேறி
    இடங்கொண் டுடலார் கிடக்கின்ற வாறே.
  • 4. விரைந்தன்று நால்வர்க்கு மெய்ப்பதி சூழ்ந்து
    புரந்தகல் லால்நிழற் புண்ணியன் சொன்ன
    பரந்தன்னை ஓராப் பழிமொழி யாளர்
    உரந்தன்மை யாக ஒருங்கிநின் றார்களே.
  • 5. நின்ற புகழும் நிறைதவத் துண்மையும்
    என்றும்எம் ஈசன் அடியவர்க் கேநல்கும்
    அன்றி உலகம் அதுஇது தேவென்று
    குன்றுகை யாலே குறைப்பட்ட வாறே.
  • 6. இன்பத்து ளேபிறந் தின்பத்தி லேவளர்ந்
    தின்பத்து ளேதிளைக் கின்ற திதுமறந்து
    துன்பத்து ளேசிலர் சோறொடு கூறையென்
    துன்பத்து ளேநின்று தூங்குகின் றார்களே.
  • 7. பெறுதற் கரிய பிறவியைப் பெற்றும்
    பெறுதற் கரிய பிரானடி பேணார்
    பெறுதற் கரிய பிராணிகள் எல்லாம்
    பெறுதற் கரியதோர் பேறிழந் தாரே.
  • 8. ஆர்வ மனமும் அளவில் இளமையும்
    ஈரமும் நல்லஎன் றின்புறு காலத்துத்
    தீர வருவதோர் காமத் தொழில்நின்று
    மாதவன் இன்பம் மறந்தொழிந் தார்களே.
  • 9. இப்பரி சேஇள ஞாயிறு போல் உரு
    அப்பரி சங்கியின் உள்ளுறை அம்மானை
    இப்பரி சேகம லத்துறை ஈசனை
    மெய்ப்பரி சேவின வாதிருந் தோமே.