ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 37. கேடுகண்டிரங்கல்

பதிகங்கள்

Photo

இருந்தேன் மலரளைந் தின்புற வண்டு
பெருந்தேன் இழைக்கின்ற பெற்றிமை ஓரார்
வருந்தேன் நுகராது வாய்புகு தேனை
அருந்தேனை யாரும் அறியகி லாரே.

English Meaning:
They Seek Not Light

They seek not His Light
In unbroken continuity;
They are like those
Who cherish not Him that is gold,
The Unrighteous they are;
``O! Lord, the Primal One!
You the Fruit of Wisdom!
The Lord of Celestial Beings!
My Sole Refuge!``
Thus I seek Him, ever and ever.
Tamil Meaning:
வண்டுகள்தாம் இன்புற வேண்டும் என்றுதான் மிகுந்த தேன் உள்ள மலர்களை அறிந்து அவற்றினுட்புகுந்து கிண்டிச் சிறிது சிறிதாகக் கொணர்ந்து மிகுந்த தேனைச் சேர்க்கின்றன. ஆயினும் அத்தேனில் ஒருசிறிதையும் அவை பருகுவதில்லை. அதனை எண்ணிப் பாராதவர்களாய், அவற்றினும் கீழ்மையராக, தானாகவே வாயில் ஒழுகுவதும், எவ்வுலகத்திலும் கிடைத்தற்கரியதும் ஆகிய தேனை மக்களில் ஒருவரும் அறிந்து பருகுகின்றார்களில்லை. ஆயினும் யான் அவர்களைப்போல அத்தேனை நுகராமல் விட்டு வருந்தமாட்டேன்.
Special Remark:
`வண்டுகளின் பெற்றிமையை எண்ணிப்பார்ப்பார் களாயின் தாமும் அவை செய்யும் தவற்றினைச் செய்யமாட்டார்கள்` என்பார், ``வண்டு பெருந்தேன் இழைக்கின்ற பெற்றிமை ஓரார்`` என்றார். சிவம் தானே தனது கருணையால் உயிர்களுக்குத் தன் இன்பத்தை வழங்குதல் பற்றி, ``வாய்புகுதேன்`` என்றும், அது வழங்கும் அவ்வின்பம்போலும் பிறிதின்பம் வேறின்மையின், ``அருந்தேன்`` என்றும் கூறினார் `நுகராது வருந்தேன்` என மாற்றிவைத் துரைக்க.
இதனால், சிவனால் தரப்படும் பேரின்பத்த சிறப்பைக் கூறி, அதனைப் பெறாது இழப்போரது அறியாமைக்கு இரங்கியவாறு.