ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 9. ஏரொளிச் சக்கரம்

பதிகங்கள்

Photo

கொண்டஇம் மந்திரம் கூத்தன் எழுத்ததாய்ப்
பண்டைஉள் நாவில் பகையற விண்டபின்
மன்றுள் நிறைந்த மணிவிளக் காத்ஞிளி
என்றும் இதயத் தெழுந்து நமவே.

English Meaning:
Chant Nama in Love; You Shall be Light

Chant this mantra
Whose letters to the Dancer Divine Belong,
Inside uluva obstacles vanishing
You shall become the jewelled lamp in the Hall of Dance;
Even now, do arise,
And chant Nama with love in your heart`s core.
Tamil Meaning:
பிராசாத கலைகளுக்குரிய மந்திரங்களாகக் கொள்ளப்பட்ட ஏரொளிச் சக்கர எழுத்துக்கள் இறைவன் எழுத் தாகவே ஆகி, யோக முறைப்படி உள்நாக்கில் மாறுபாடு நீங்க ஒலிக்கப் பட்ட பின்னர், முத்திக்கு நேரே வாயிலாகிய திருவைந்தெழுத்து இருதயத்திலே தோன்றி, அவ்வம்பலத்தில் நிறைந்து நிற்கின்ற, சிவமாகிய தூண்டாவிளக்காய் என்றும் ஒளிவிட்டு விளங்கும்.
Special Remark:
பண்டை - பண்டை நெறி. `பண்டையின்` என ஐந்தன் உருபு விரிக்க. பகை - மாறுபாடு. `இன்றும்` என்பது பாடம் அன்று. `விண்டபின் நம எழுந்து ஆயிடும்` என முடிக்க. ``நம`` என்பது, திருவைந்தெழுத்தை முதற்குறிப்பாற் கூறியவாறு. பிராசாத யோகம் முதிர்ந்தவர்க்குத் திருவைந்தெழுத்து மந்திரம் எளிதில் பயன்தரும் என்றவாறு.
இதனால், ஏரொளிச்சக்கரத்தின் முடிந்த பயன் கூறப்பட்டு.