ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 9. ஏரொளிச் சக்கரம்

பதிகங்கள்

Photo

காலரை முக்கால் முழுதெனும் மந்திரம்
ஆலித் தெழுந்தமைந் தூறி யெழுந்தவாய்ப்
பாலித் தெழுந்து பகையற நின்றபின்
மாலுற்ற மந்திரம் மாறிக்கொள் வார்க்கே.

English Meaning:
How it is Meditated for Worldly Purposes

As a quarter, a half, a three-quarter and one full
The mantra thus in measure composed ascends,
And as it thus ascends,
The obstacles internal perish.
Thus it is for those who chant the mantra enchanting
For attainments worldly.
Tamil Meaning:
கால், அரை, முக்கால், ஒன்று என இங்ஙனம் பல வகையால் வரையறுக்கப்பட்ட மாத்திரைகளின் படி அகாரம் முதலிய கலைகள் மந்திரங்களாக உச்சரிக்கப்பட்டுத் தோன்றிப் பொருந்தி அழுந்தி நின்று வளர்ந்து தம் தம் பயனைத் தந்து மேற்போய் பிறவி யாகிய பகை நீங்கும்படி முற்றி நிற்குமாயின், ஏரொளிச் சக்கரத்தில் உள்ள அம்மந்திரங்களை அம் முறையானே மாறி நிற்கக் கொண்டு செபிக்கின்ற அவர்களுக்கு அம்மந்திரங்கள் அவர்களை மிகவும் விரும்புகின்றனவாய் அமையும்; `அஃதாவது அவர்க்குக் கைவந்து நிற்கும்` என்பதாம்.
Special Remark:
``காலரை முக்கால் முழுது`` என்றது, `பல்வேறு வரையறையானவை` என்றவாறு. பிராசாதகலைகளின் மாத்திரை யளவை `பிராசாத சட்கம்` முதலிய நூல்களிற் காண்க. ஆலித்து - ஒலித்து; ஒலிக்கப்பட்டு, ஒலிக்கப்படுதல் சக்கரத்தில் உள்ள எழுத்துக் களின் வழியாம். ``மாலுற்ற`` என்றது முற்று. `மந்திரம் மாறிக்கொள் வார்க்கு மாலுற்ற` என்க.
இதனால், `ஏரொளிச் சக்கர மந்திரங்களை மாத்திரை பிறழாது உச்சரித்தல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.