
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 9. ஏரொளிச் சக்கரம்
பதிகங்கள்

மதித்திடும் அம்மையும் மாமாதும் ஆகும்
மதித்திடும் அம்மையும் மங்கனல் ஒக்கும்
மதித்தங் கெழுந்தவை மாரண மாகில்
கொதித்தங் கெழுந்தவை கூடகி லாவே.
English Meaning:
Siva`s Letter and Sakti`s Letter in Pranava ChakraFor the Chakra, thus said
First letter is ``A`` of Siva
The letter next is of Sakti, ``U``
The Chakra is the earth, fire and the rest of elements four,
Of the Chakra thus formed, more can be said.
Tamil Meaning:
மேற்கூறிய அம் மந்திரங்கள் அவரவரது பக்குவத் திற்கு ஏற்ப, ஒருத்தியே ஆய அருட்சத்தியாயும், அளவற்றவளாய திரோதான சத்தியாயும் நிற்கும். அச்சத்திகள் பலவுமாகின்ற பராசத்தி நீறுபூத்த நெருப்பு போல்பவள். ஆதலின், அம்மந்திரங் களால் உலகப் பயன்கள் கைகூடுமாயினும், பிறரை நலிய எண்ணு கின்ற தம்பனம் முதலியவைகளைச் சிறப்பாக மாரணத்தைப் பெரிதாக மதித்து அவற்றைச் செபித்தால் அவை சீற்றம் அடையும்; அதனால், அவ் இழி பயன்கள் கைகூட மாட்டா.Special Remark:
அருட்சத்தி, பராசத்தி இவர்களையே ``அம்மை`` என்றார், சிறப்பு நோக்கி. மாமாது - பெரியவள்; என்றது எண் பற்றி. ``ஆகும்`` என்பது எச்சம். மங்கி உள்ள அனல் அதன் இயல்பு அறியாது தீண்டினாரைச் சுடுமாதலின், அது அம்மையின் இயல்பறியாது தீங்கிற்குத் துணைபுரிய வேண்டி அணுகுவாரை ஒறுக்கின்ற பராசக்திக்குத் தொழில் உவமையாயிற்று. ``ஆகில்`` என்பதை, ``மதித்தங் கெழுந்தவை`` என்றதனோடும் கூட்டுக. ``காரணமாகில்`` என்பது பாடம் அன்று. கொதித்து அங்கு எழுந்து - அவ்விடத்துக் கொதித்து எழுதலால். பின்னர், ``கூடகிலா`` என்றே ஒழிந்தாராயினும், அவற்றிற்கு எதிரானவை விளைதல் இதனால் பெற்றாம். இங்ஙனமாயினும் சிறுபான்மை அப்பயன்கள் அப்பொழுதைக்கு நலமாய் விளைதலும், மேல், ``ஆறியல்பாக அமைந்து விரிந்திடும்`` என்றதனாற் பெறுதும்,Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage