ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 9. ஏரொளிச் சக்கரம்

பதிகங்கள்

Photo

விரிந்தது விந்துவும் கெட்டது வீசம்
விரிந்தது விந்துவும் நாதத் தளவு
விரிந்தது உட்பட்ட எட்டெட்டு மாகில்
விரிந்தது விந்து விதையது வாமே.

English Meaning:
Bindu Drawn in Visuddha Becomes Seed of Liberation

As the Bindu rose higher and higher,
The Bija (Seed) in vain went;
When Bindu rises equal with Nada,
And is drawn within to pervade the petals sixteen of the (Visuddha adhara)
The Bindu that expands becomes the Seed of Liberation.
Tamil Meaning:
சுத்த மாயையே அனைத்தையும் வியாபித்து நிற்ப தாகலின், அதனை அறியாதார், `முக்குண வடிவான பிரகிருதி ஒன்றே உலகிற்கு முதனிலை` எனக் கூறும் கூற்று உண்மையன்றாய் ஒழிந்தது. சுத்த மாயை வித்தை முதலாக நாதம் முடிய விரிந்துநின்று அறுபத்து நான்கு கலைகளாகச் சொல்லப்படுகின்ற நூல்களையும் தன்னுட் கொண்டு நிற்குமாயின், சுத்த மாயையே வியாபகமானது; அதுவே உலகிற்குப் பெரு முதல்நிலை.
Special Remark:
உம்மைகள் சிறப்பு. முதலில் உள்ள ``விந்துவும்`` என்பதன்பின், `அதனால்` என்பது வருவிக்க. இதனுள், ``வீசம்`` (பீசம்) என்றது, சாங்கியர் முதலிய பலருங் கூறும் முதனிலையைக் குறித்தது. அதுபற்றிக் கூறுவோரது கூற்று வீழ்தலை, அதுவே வீழ்தலாகக் கூறினார். `உட்பட்ட எட்டெட்டுமாய் விரிந்ததாகில்` எனவும், `அதுவே விதையாம்` எனவும் மாற்றுக. `எட்டெட்டுமாய்` என ஆக்கம் வருவிக்க. `உட்கட்ட` என்பதும், `அளவினில்` என்பதும் பாடம் அல்ல. ``அறுபத்துநான்கு கலைகளும்`` என்றது. `சொல்லுலகம் அனைத்தும்` என்றவாறு. இதனாலும், `சொல்லுலகம் ஆகாய பூதத்தின் காரியமே` என்றொழியும் சாங்கியர் முதலியோரது கூற்றுக்களை மறுத்தார். ``ஆகில்`` என்பது, ``நீரின் றமையா துலகெனின்`` 1 என்பதிற்போலத் தெளிவுப் பொருள்தந்தது.
இதனானே, பிற மதத்தார் கூறும் கூற்றுக்களை மறுத்து மேற் கூறியவை வலியுறுத்தப்பட்டன.