ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. ஒளியை அறியில் உருவும் ஒளியும்
    ஒளியும் அருவம் அறியில் அருவாம்
    ஒளியின் உருவம் அறியில் ஒளியே
    ஒளியும் உருக உடன்இருந் தானே.
  • 10. உளங்கொளி யாவதென்? உள்நின்ற சீவன்
    வளங்கொளி யாய்நின்ற மாமணிச் சோதி
    விளங்கொளி யாய்மின்னி விண்ணில் ஒடுங்கி
    அளங்கொளி ஆயத்து ளாகிநின் றானே.
  • 11. விளங்கொளி யான விகிர்தன் இருந்த
    துளங்கொளிப் பாசத்துள் தூங்கிருள் சேரா
    கலங்கொளி நட்டமே கண்ணுதல் ஆடி
    உளங்கொளி உன்மனத் தோன்றிநின் றானே.
  • 12. போது கருங்குழல் போல்நவர் தூதிடை
    ஆதி பரத்தை அமரர் பிரானொடும்
    சோதியும் அண்டத்தப் பால் உற்ற தூவொளி
    நீதியின் அல்லிருள் நீக்கிய வாறே.
  • 13. `உண்டில்லை` என்னும் உலகத் தியல்பிது
    பண்டில்லை என்னும் பரங்கதி உண்டுகொல்
    கண்டில்லை மானுடர் கண்ட கருத்துறின்
    விண்டில்லை உள்ளே விளக்கொளி யாமே.
  • 14. சுடருற ஓங்கிய துள்ளொளி ஆங்கே
    படருறு காட்சிப் பகலவன் ஈசன்
    அடருறு மாயையின் ஆரிருள் வீசி
    உடலுறு ஞானத் துறவிய னாமே.
  • 15. ஒளிபவ ளத்திரு மேனிவெண் ணீற்றன்
    அளிபவ ளச்செம்பொன் ஆதிப்பிரானும்
    களிபவ ளத்தினன் காரிருள் நீக்கி
    ஒளிபவ ளத்தென்னோ(டு) ஈசன்நின் றானே.
  • 16.  ஈசன்நின் றான்இமை யோர்கள்நின் றார்நின்ற
    தேசம்ஒன் றின்றித் திகைத்தழைக் கின்றனர்
    பாசம்ஒன் றாகப் பழவினைப் பற்றுற
    வாசம்ஒன் றாமலர் போன்றது தானே.
  • 17. தானே இருக்கும் அவற்றின் தலைவனும்
    தானே இருக்கும் அவன்என நண்ணிடும்
    வானாய் இருக்கும்இம் மாயிரு ஞாலத்துப்
    பானாய் இருக்கப் பாவலும் ஆமே.
  • 2. புகல்எளி தாகும் புவனங்கள் எட்டும்
    அகல்ஒளி தாய்இருள் ஆசற வீசும்
    பகல்ஒளி செய்ததும் அத்தா மரையில்
    இகல்ஒளி செய்தெம் பிரான் இருந்தானே.
  • 3. விளங்கொளி அங்கி விரிகதிர் சோமன்
    துளங்கொளி பெற்றன சோதி அருள
    வளங்கொளி பெற்றது பேரொளி வேறு
    களங்கொளி செய்து கலந்துநின் றானே.
  • 4. இளங்கொளி ஈசன் பிறப்பொன்றும் இல்லி
    துளங்கொளி ஞாயிறும் திங்களும் கண்கள்
    வளங்கொளி அங்கியும் மற்றைக்கண் நெற்றி
    விளங்கொளி செய்கின்ற மெய்காயம் ஆமே.
  • 5. மேலொளிக் கீழதின் மேவிய மாருதம்
    பார்ஒளி அங்கி பரந்தொளி ஆகாசம்
    நீர்ஒளி செய்து நெடுவிசும் பொன்றினும்
    ஓர் ஒளி ஐந்தும் ஒருங்கொளி யாமே.
  • 6. மின்னியல் தூவொளி மேதக்க செவ்வொளி
    பன்னிய ஞானம் பரந்த பரத்தொளி
    துன்னிய ஆறொளி தூய்மொழி நாடொறும்
    உன்னிய ஆறொளி ஒத்தது தானே.
  • 7. விளங்கொளி மின்னொளி யாகிக் கரந்து
    துளங்கொளி ஈசனைச் சொல்லும்எப் போதும்
    உளங்கொளி ஊனிடை நின்றுயிர்க் கின்ற
    வளங்கொளி எங்கும் மருவிநின் றானே.
  • 8. விளங்கொளி அவ்வொளி அவ்விருள் மன்னும்
    துளங்கொளி யான்தொழு வார்க்கும் ஒளியான்
    அளங்கொளி யார்அமு தாரநஞ் சாரும்
    களங்கொளி ஈசன் கருதது மாமே.
  • 9. இலங்கிய தெவ்வொளி அவ்வொளி ஈசன்
    துளங்கொளி போல்வது தூங்கருட் சத்தி
    விளங்கொளி மூன்றே விரிசுடர் தோன்றி
    உளங்கொளி யுள்ளே ஒருங்குகின் றானே.